தமிழகத்தில் பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தீ காயமடைந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் நலம் குறித்து விசாரிக்கும் அமைச்சர்
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்.20ம் தேதி) சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் தேநீர் அருந்தி, இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தீ விபத்து சிகிச்சை வார்டு ஆய்வு - திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து செல்வது என்பது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறோம். தமிழக முதல்வர் ஒவ்வொரு தீபாவளி முன்பாகவும் பாதுகாப்பற்ற முறைகளில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசின் பல்வேறு துறைகளின் எடுத்துரைக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தி யிருக்கிறார்கள்.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை, தீயணைப்புத் துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறைகள் இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளி அன்று சிறப்பு சிகிச்சை வார்டுகள் அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் 36ல் தலா 20 படுக்கைகள் வீதம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான தீக்காய பிரிவு வார்டுகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த வாரம் இம்மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய வெண்டிலேட்டர் கருவியுடன் கூடிய வார்டுகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று தனித்தனி வார்டுகள் தொடங்கப்பட்டது. நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாடு ழுழுவதும் தொடங்கி பட்டாசு வெடித்ததினால் தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 89 பேர், இதில் 41 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் இல்லம் திரும்பி இருக்கிறார்கள். 48 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 48 பேரில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 8 பேர், மிகச் சிறிய அளவில் அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் 32 பேர், அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 6 குழந்தைகள் பாதிக்கப்பட்டு ஒரு மகளிர் சகோதரி ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த 7 பேரில் ஒரு குழந்தைக்கு மட்டும் 7% அளவிற்கு தீக்காய பாதிப்பும், ஒரு குழந்தைக்கு 15% தீக்காய பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. யாருக்கும் உயிர் பாதிப்பு என்கின்ற அளவில் பிரச்சினை இல்லை. மிகப் பெரிய அளவில் காயங்கள் இல்லாமல் தீபாவளி கடந்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் மீதமுள்ள நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது.
இன்னமும் பாதுகாப்பான தீபாவளி மக்கள் கொண்டாட வேண்டும் என்கின்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்து கின்ற வகையிலும், தீபாவளி நாளில் தங்களுடைய குடும்பத்தை விட்டு, அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக தீக்காய சிகிச்சை வார்டுகளில் பணியாற்றுகின்ற மகத்தான மருத்துவச் சேவை ஆற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை பாராட்டுகின்ற வகையில் ஒவ்வொரு ஆண்டும் நான் நேரில் சென்று அவர்களுடன் தேநீர் அருந்தி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது.
கன்யான் திட்ட செயற்கைக்கோளுக்காக புதிய ராக்கெட் தயாரிக்க முயற்சி
திருநெல்வேலி, அக்.19- மனிதர்களை விண் வெளிக்கு அனுப்பும் ககன் யான் திட்டத்தில் 80 ஆயிரம் கிலோ செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில் புதிய ராக்கெட் தயாரிக்கும் முயற்சி நடைபெறுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் உள்ள தனியார் கல்லூரி யில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ தலைவர் வி.நாரா யணன் பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது: இந்திய வானிலை ஆராய்ச்சிக்கு அதிக அள விலான செயற்கைக்கோள்களை அனுப்பி இருக்கிறோம். இதனால், வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக, முன்கூட்டியே பெற முடி கிறது. மீனவர்கள் கடலில் எல்லையை கடக்காமல் இருக்கவும், மீன்கள் அதிகமாக உள்ள பகுதிகளை அறியவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைய செயலிகளை உருவாக்கி கொடுத்துள்ளோம். அதன் மூலமாக தமிழிலேயே தக வல்களைப் பெற முடியும். ககன்யான் திட்டத்துக்காக 80 ஆயிரம் சோதனைகள் நடைபெற்றுள்ளன. இத்திட்டத்தில் முதலில் 3 ஆளில்லா ராக்கெட்களை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்த பின்பே, ஆட்களை விண்ணுக்கு அனுப்புவோம். அதற்கான முதல் ராக்கெட் இந்த ஆண்டு இறுதியில் விண்ணுக்கு செலுத்தப்படும். அடுத்த ஆண்டு 2 ராக்கெட்டுகள் ஏவப்படும். விண்வெளியில் இருக்கும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்க ‘க்ரூ எஸ்கேப் சிஸ்டம்’ என்ற பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்துள் ளோம். உலக அளவில் விண்வெளிக்கு ராக்கெட்களை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் இந்தியா 2 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதை 10 சதவீதமாக உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, 10 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் கோள்களை எடுத்து செல்லும் ராக்கெட்களை வெற்றிகரமாக அனுப்பி உள்ளோம். 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக் கோளை அனுப்புவதற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க அனுமதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.