
வந்தவாசி, செப் 22:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று இரவு கருடசேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் உற்சவ மூர்த்தி வெள்ளி கருட வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் மேளதாளத்துடன் மூன்று முறை வலம் வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%