நிலம் கையகப்படுத்தியதில் பல கோடி ரூபாய் மோசடி: 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

நிலம் கையகப்படுத்தியதில் பல கோடி ரூபாய் மோசடி: 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை



சென்னை: நெடுஞ்​சாலை, சிப்​காட் ஆகிய​வற்​றுக்கு நிலம் கையகப்​படுத்​தி​ய​தில் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை நடை​பெற்​றிருப்​ப​தாக எழுந்த புகாரில் சென்​னை​யில் 15 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றது. சென்னை கே.கே.நகர் லட்​சுமண​சாமி சாலையை சேர்ந்​தவர் மகாவீர்.


இவர் எம்​ஜிஆர் நகர் மார்க்​கெட்​டில் நகைக் கடை, பைனான்ஸ் நிறு​வனம், மருத்​துவஉபகரணங்​கள் விற்​பனை செய்​யும் நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இவரது வீட்​டுக்கு நேற்று காலை 7 மணி​யள​வில் 2 வாக​னங்​களில் வந்த 6 அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர். இதே​போல், சைதாப்​பேட்டை ஸ்ரீநகர் காலனி தெரு​வில் வசித்து வரும் பொதுப்​பணித் துறை ஒப்​பந்​த​தா​ரர் கலைச்​செல்​வன் வீட்​டிலும் சோதனை நடை​பெற்​றது.


அம்​பத்​தூர் திரு​வேங்​கடா நகரில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசித்து வரும் பிர​காஷ் என்​பவரது வீடு, கோடம்​பாக்​கம் விஓசி 2-வது தெரு​வில் உள்ள தனி​யார் நிறு​வனம், கீழ்ப்​பாக்​கம் வாக்​டல்ஸ் சாலை​யில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசித்​து​வரும் இரும்பு வியா​பாரி நிர்​மல்​கு​மார் வீடு, கே.கே.நகர் முனு​சாமி சாலை​யில் வசிக்​கும் தொழில் அதிபர் ஒரு​வரின் வீட்​டிலும் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.


எம்​ஜிஆர் நகர் அண்ணா மெயின் ரோட்​டில் உள்ள ரியல் எஸ்​டேட் அலு​வலகம், சவு​கார்​ பேட்டை கந்தப்ப முதலி தெரு​வில் உள்ள பைனான்ஸ் அதிபர் சுனில், வடபழனி 2-வது மெயின் ரோட்​டில் நிதி நிறுவன அதிபர் ராகேஷ் வீடு உட்பட சென்​னை​யில் 15 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர். குறிப்​பாக இந்த சோதனை அரசு ஒப்​பந்​த​தா​ரர்​கள், தொழில​திபர்​கள் வீடு​களைக் குறி​வைத்தே நடந்​தது.


சோதனை குறித்து அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், “2022-ம் ஆண்டு ஸ்ரீபெரும்​புதூர் பகு​தி​யில் சிப்​காட் அமைக்க நிலம் கையகப்​படுத்​தி​ய​தில் நடை​பெற்ற முறை​கேடு​கள் தொடர்​பாக காஞ்​சிபுரம் சிபிசிஐடி போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.


அதாவது அரசு நிலத்தை போலி ஆவணங்​கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், சிபிசிஐடி பதிவு செய்த முதல் தகவலறிக்​கை​யின் அடிப்​படை​யில் இந்த சோதனை நடை​பெற்​றது.


அதே​போல், ஸ்ரீபெரும்​புதூரில் நெடுஞ்​சாலைகள் அமைக்க நிலம் கையப்​படுத்​தி​ய​தி​ல் அரசு நிலத்​தையே வேறொரு​வருக்கு பட்டா போட்​டு, அவரிட​மிருந்து அந்த நிலத்தை நெடுஞ்​சாலை அமைக்க கையகப்​படுத்​தி​யது போல போலி ஆவணங்​கள் தயார் செய்து, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக காஞ்சிபுரம் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இது தொடர்பாகவும் சோதனை நடை​பெற்​றது” என்று அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர். சோதனை முழு​மை​யாக நிறைவடைந்த பிறகே மேற்​கொண்டு முழு விவரங்​கள் தெரிய​வரும்​ என அதி​காரி​கள்​ தரப்​பில்​ கூறப்​படுகிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%