பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்த கருத்து: சூர்யகுமாருக்கு 30% அபராதம்
Sep 28 2025
33

துபாய்: பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த காரணத்துக்காக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணி உடனான லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். அவரது கருத்து அரசியல் ரீதியானது என ஐசிசி வசம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் கொடுத்தது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணையை ஐசிசி மேட்ச் ரெஃப்ரீ ரிச்சி ரிச்சர்ட்சன் நடத்தினார். தன் மீதான குற்றச்சாட்டை சூர்யகுமார் யாதவ் மறுத்துள்ளார். இருப்பினும் அவருக்கு ஆட்டத்துக்கான கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி. மேலும், இந்த தொடரில் இனி அரசியல் ரீதியான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டாம் என அவரிடம் கூறியுள்ளதாகவும் தகவல். இதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐசிசி வசம் முறையிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?