
கரூர், அக். 18- கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம், அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது, கூட்டத்திற்கு நகர்மன்ற துணை தலைவர் பிரதாபன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் இந்துமதி அரவிந்த், “நகராட்சிக்குச் சொந்தமான காந்தி திருமண மண்டபத்தின் வாடகையை 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது ஏற்புடையதல்ல. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையே நிர்ணயிக்கப்பட வேண்டும். மண்டபத்தின் பராமரிப்பினை தனியாருக்குக் கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு நகராட்சி நிர்வாகமே நடத்திட வேண்டும். நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களின் மூலமாக தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதந்தோறும் நகராட்சி கூட்டம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். மேலும், தனது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பேசினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?