புதிய துணை மருத்துவமனைகளில் 64 பணியிடங்கள்

புதிய துணை மருத்துவமனைகளில் 64 பணியிடங்கள்

சென்னை:

பு​திய துணை மருத்​து​வ​மனை​களில் 20 மருத்​து​வர்​கள் உட்பட 64 பணி​யிடங்​களை உரு​வாக்க சுகா​தா​ரத்​துறை அனு​மதி அளித்​துள்​ளது.


இதுதொடர்​பாக தமிழக சுகா​தா​ரத்​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார் பிறப்​பித்த அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆவடி மற்​றும் திருப்​பூர் மாவட்​டம் வேலாம்​பாளை​யத்​தில் அரசு துணை மருத்​து​வ​மனை​கள் அமைக்க அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டது.


அதன்​படி, ஆவடி​யில் ரூ.27 கோடி​யிலும், வேலாம்​பாளை​யத்​தில் ரூ.26.90 கோடி​யிலும் அதற்​கான கட்​டிடப் பணி​கள் மேற்​கொள்ள முடிவு செய்​யப்​பட்​டது. மேலும், ஆவடி​யில் ரூ.7.60 கோடி​யிலும், வேலாம்​பாளை​யத்​தில் ரூ.4.88 கோடி​யிலும் மருத்​துவ உபகரணங்களை நிறுவ திட்​ட​மிடப்​பட்​டது.


அதுதொடர்​பாக, புதிய பணி​யாளர் இடங்​களை உரு​வாக்​கு​வது குறித்​தும் மருத்​துவ சேவை​கள் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்குநர் பரிந்​துரைகளை அனுப்​பி​யிருந்​தார்.


அதனை பரிசீலித்த அரசு, 20 மருத்​து​வர் பணி​யிடங்​கள், 35 செவிலியர் பணியிடங்கள் உட்பட 64 பணி​யிடங்​களை உரு​வாக்​க​வும், அவர்​களுக்​கான ஊதிய செல​வினங்​களுக்​கும் அனு​மதி அளிக்கப்பட்டுள்​ளது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%