ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ

ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ


ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.


ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் "எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இங்குள்ள உணவகத்தில் தீபிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது எக்‍ஸ்பிரஸ் மாலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.


கடந்த 2 மாதம் முன்பு, செப்டம்பர் மாதம் 23 ந்தேதி எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலின் 4வது ஸ்கிரீனில், லிப்ட் விபத்தில் என்ஜினியர் ராஜேஷ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லிப்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். தீவிபத்து காரணமாக கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் மாலுக்கு சென்றவர்கள் சிதறி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மாலில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மாலில் உள்ள 4 வழிகள் மூலமாகவும் புகையை வெளியேற்றப்படும் பணி நிறைவடைய 4 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தேசம் அடைந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடைபெறுவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெண் உதவியாளரிடம் பாலியல் அத்துமீறல்: ஓய்வு பெற்ற நீதிபதி மீது வழக்குப் பதிவு

 

சென்னை: பெண் உதவி​யாளரிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்​ட​தாக ஓய்​வு​பெற்ற நீதிபதி மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர். சென்னை செனாய் நகரில் 74 வயதுடைய ஓய்​வு​பெற்ற மாவட்ட நுகர்​வோர் நீதி​மன்ற நீதிபதி ஒரு​வர் தனி​யாக வசிக்​கிறார்.


முதுமை காரண​மாக அவருக்கு தேவை​யான உதவி​களை உடனிருந்து கவனிக்​கும் வகை​யில் மடிப்​பாக்​கத்​தில் வசிக்​கும் 43 வயதுடைய பெண் உதவி​யாளர் ஒரு​வர் பணி​யமர்த்​தப்​பட்​டார். ஓய்வு பெற்ற நீதிப​தியை அந்​தப்பெண் உடனிருந்து கவனித்து வந்​தார்.


கடந்த செப்​டம்​பர் மாதம் ஓய்​வு​பெற்ற நீதிப​தி,அந்த பெண்ணை காரில் வெளியே அழைத்​துச் சென்​றுதேவை​யான உடை உள்ளிட்ட பொருட்​களை வாங்​கிக் கொடுத்​துள்​ளார். பின்​னர், இரு​வரும் வீடுதிரும்​பினர்.


இரவு நீண்ட நேரம் ஆகி​விட்​ட​தால் பணிப் பெண்ணை அன்று இரவு தனது வீட்​டிலேயே தங்​கும்​படி ஓய்வு நீதிபதி கேட்​டுக்கொண்​டார். அந்த பெண்​ணும் அங்​கேயே தங்​கி​னார். நள்​ளிர​வில் அந்த பெண்​ணிடம் ஓய்வு நீதிபதி தவறாக நடக்க முயன்​றுள்​ளார்.


அதிர்ச்​சி, அடைந்த பெண், அவரது ஆசைக்கு இணைங்க மறுத்​ததோடு வீட்டை விட்டு உடனடி​யாக வெளி​யேறி உள்​ளார். மறு​நாள் இது தொடர்​பாக டி.பி சத்​திரம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.


போலீ​ஸார் இரு​வரை​யும் தனித்​தனி​யாக அழைத்து விசா​ரித்​தனர். இதில், ஓய்வு பெற்ற நீதிப​தி, உதவி​யாள​ராக வந்த பெண்​ணிடம் எல்லை மீற முயன்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, அவர் மீது 2 பிரிவு​களின் ​கீழ் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.


புகார் அளித்த பெண், ஏற்​கெனவே சென்​னை​யில் உள்ளதுணை ஆணை​யர் ஒரு​வர் மீதுபுகார் தெரி​வித்​து, அவர் இடமாற்​றம் செய்​யப்​பட்​டார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%