tamilnadu epaper

அண்ணாமலை வழியில் பா.ஜ.,வை வளர்ப்பேன் நயினார் நாகேந்திரன் சொல்கிறார்

அண்ணாமலை வழியில்  பா.ஜ.,வை வளர்ப்பேன்  நயினார் நாகேந்திரன் சொல்கிறார்


சென்னை, ஏப்.16-

அண்ணாமலை சித்தாந்தத்தை பின்பற்றி பா.ஜ.,வை வழி நடத்துவேன் என்று புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

தமிழக பா.ஜ., புதிய தலைவர் நயினார்நாகேந்திரன் ஒரு தனியார் டிவிக்குபேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

 பாஜ மிகப்பெரிய கட்சி, தமிழகத்தில் 19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்க தயாராக இருக்கிறோம். தற்போது எங்கள் கூட்டணியில் இபிஎஸ் இணைந்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்திருக்கிறார்கள். பாஜ இந்து சார்ந்த கட்சி இல்லை. அனைவருக்குமான கட்சி.

 மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவது தான் எங்கள் நோக்கம். அதற்கு யார் வந்தாலும் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம்.

அண்ணாமலை வழியில்...

அமலாக்கத்துறையை வைத்து மிரட்டி கூட்டணி சேர்க்கவில்லை. அமலாக்கத்துறை ஒரு தனி அமைப்பு. யார் யார் தவறாக பணப் பரிவர்த்தனை செய்கிறார்களோ அவர்கள் வீட்டுக்கு வீடு வருவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?.

 அண்ணாமலை என்ன சித்தாந்தத்தை மேற்கொண்டாரோ அதை நாங்களும் பின்பற்றி கட்சியை வளர்க்க இருக்கிறோம்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.