மூலவர்: பைரவர் உற்சவர்: சட்டை நாதர், புராண பெயர் :எந்திரபுரி ஊர்: தகட்டூர் மாவட்டம்: நாகப்பட்டினம் மாநிலம் :தமிழ்நாடு.
தல சிறப்பு :
இங்கு பைரவர் மூலவராக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம் :
காலை 6:00 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
பொது தகவல்:
அனுமனுடன் வந்த பைரவர் என்பதால் இத்தளத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி ஆகியோரும் பிரகாரத்தில் கணபதி வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் துர்க்கை சண்டிகேஸ்வரர் ஆகிவரும் உள்ளனர் கோயிலுக்கு எதிரே தீர்த்த குளம் உள்ளது. குளத்தின் ஒரு கரையில் காத்தாயி, கருப்பாயி சமேத ராவுத்தர் சன்னதி உள்ளது. இவரும் இத்தளத்தில் காவல் தெய்வமாக இருக்கிறார்.
பிரார்த்தனை :
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன் :
சுவாமி அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல பெருமை:
தகட்டூரில் உள்ள வைரவநாத ஸ்வாமி கோயிலில் பைரவர் மூலஸ்தானத்தில் இருந்து அருள் பாலிக்கிறார். இவரை மூலஸ்தானத்தில் கொண்ட கோயில் தமிழகத்தில் இது மட்டுமே.
பைரவர் பிறப்பு:
அபிதான சிந்தாமணி என்ற நூலில் பைரவர் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன் இறவா வரம் வேண்டும் என சிவனிடம் வரம் கேட்டான். ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும் படி அவனிடம் சொன்னார். அவன் அகங்காரத்துடன் ஒரு பெண்ணைத் தவிர தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை ஒரு பெண் என்ன செய்து விட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த அவன் அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். உடனே பார்வதி சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தின் கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்த சுடர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. காலம் என்ற விஷம் படிந்த அந்த பெண்ணுக்கு காலி என பெயர் சூட்டினால் பார்வதி. காளி தேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசை நோக்கி திரும்பினாள். அந்தக் கோபம் கனலாக வடிவெடுத்து சூரனை சுட்டரித்தது. பின்னர் அந்தக் கனலை காளிதேவி ஒரு குழந்தையாக மாற்றி அதற்கு பாலூட்டினாள். அதன் பிறகு சிவபெருமான் காளியையும் அந்த குழந்தையையும் தன் உடலுக்குள் புக செய்தார். அப்போது அவரது உடலில் இருந்து காலியால் உருவாக்கப்பட்டது போல எட்டு குழந்தைகள் உருவாகின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன் குழந்தைக்கு பைரவர் என்று பெயர் வைத்தார்.
நாய் வாகனம்:
தெய்வங்களுக்கு காலை சிங்கம் யானை மயில் போன்ற வாகனங்கள் இருக்க பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயே பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து பிஸ்கட் கொடுத்து குழந்தை போல வளர்ப்பார்கள். சிலர் நாயை தெருவில் கண்டாலே கல்லறார்கள் இதுபோல வாழ்க்கையில் வரும் துன்பத்தையும் இன்பத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என்றே வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு வேத நாழி என்ற பெயரும் இருக்கிறது.
இதன் தமிழ் பெயரே தகட்டூர் சக்தி வாய்ந்த தெய்வங்களின் முன்பு ஸ்ரீ சக்கரம் என்ற அமைப்பு உருவாக்கப்படும். இந்தக் கோவிலிலும் ஒரு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.உற்சவர் சட்டை நாதர் சிலையும் இருக்கிறது.
தல வரலாறு:
இலங்கையில் இராவண வதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோஷம் நீக்குவதற்காக ராமேஸ்வரத்தில் ராமபிரான் சிவபூஜை செய்ய முடிவெடுத்தார். அதற்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பினார். அனுமன் லிங்கத்துடன் வரும் பொழுது அவருடன் மகா பைரவரும் வந்தார். கோயில்களில் பைரவரே காவல் தெய்வம் அக்காலத்தில் கோயிலை பூட்டி வைரவர் சன்னதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவார்கள். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக பைரவர் கருதப்பட்டார். அதுபோல காசு லிங்கத்திற்கு காவலாக பைரவர் அனுமனுடன் வந்துள்ளார். அவருக்கு தற்போதைய தகட்டூர் தளத்தில் குடியிருக்க ஆசை பிறக்கவே அங்கேயே தங்கிவிட்டார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில் இங்கு பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார்.
இங்கனம்
ப.வைரவநாதன்
நாகப்பட்டினம் மாவட்டம்
(9884938620)
பின்குறிப்பு:
என் தந்தைக்கும் தாய்க்கும் இந்த கோயிலை குலதெய்வ கோயில் ஆகும்.
: முகவரி,
ப.வைரவநாதன்
2/102,ஆற்றங்கரைத் தெரு
வடகுத்தாலம்
கோபுராஜபுரம்-
609703
நாகப்பட்டினம்-வட்டம் & மாவட்டம்