சோட்டாணிக்கரை பகவதி*
ஜோதியாகநின்றகரை அம்மன் கோயில் -அதாவது பராசக்தி ஜோதி உருவில் நின்று மும்மூர்த்திகளுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுத்த இடம்
கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் அருகில் உள்ளது.
அன்னை பகவதியை இறைவன் திருமாலுடன் சேர்த்து "அம்மே நாராயணா" என பக்தர்கள் வழிபடுகின்றனர். அதாவது நாராயணியும் நானே நாராயணனும் நானே எனப்பொருள்.
அன்னை பகவதி ஒவ்வொரு நாளன்றும் மூன்று உருவங்களில் காட்சி அளிக்கிறாள்: காலையில் அறிவாற்றலை வளர்க்கும் அன்னை சரஸ்வதியின் ரூபத்தில் வெண்ணிற ஆடையிலும்; மாலையில் சௌபாக்கியம் தரும் அன்னை மகாலட்சுமியாக, ஆழ்சிவப்பு வண்ண உடையிலும்; இரவில் வீரத்தை வளர்க்கும் அன்னை துர்க்கையாக, கரும் நீல வண்ண உடையிலும், நண்பகல் உச்சபூஜையிலும் இரவு உச்சபூஜையிலும் மகாகாளியாக காட்சி தந்து அருள்பாலித்து வருகிறாள்.
கீதா ராஜா சென்னை