tamilnadu epaper

உண்டியலில் கை சிக்கி கொண்டதால் விடிய விடிய தவித்த திருடன்

உண்டியலில் கை சிக்கி கொண்டதால் விடிய விடிய தவித்த திருடன்

தருமபுரி:


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தில் உள்ளது பெரியாண்டிச்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருட ஒரு திருடன் வந்தான்.


அப்போது அவன் உண்டியலின் உள்ளே கையை நுழைத்து பணம் எடுக்க முயற்சித்தான். அதில், அவனுடைய கை உண்டியலில் சிக்கி கொண்டது. பின்னர் கையை வெளியே எடுக்க முடியாமல் அவன் விடிய, விடிய கோவில் வளாகத்திலேயே இருந்தான். நேற்று காலை அந்த வழியாக கிராம மக்கள் சென்றனர்.


அப்போது கோவில் உண்டியலில் திருட முயன்ற திருடனின் கை சிக்கி கொண்டதை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.


அதில் அவன், சேசம்பட்டி அருகே உள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது42) எனவும், உண்டியலில் பணத்தை திருட முயற்சித்து கை சிக்கி கொண்டதும் தெரியவந்தது.


தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உண்டியலை உடைத்து திருடனின் கை எடுத்தனர். இதையடுத்து தங்கராஜை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்த னர்.


கைதான தங்கராஜ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


கோவிலில் உண்டியலில் பணத்தை திருட முயன்றபோது கை சிக்கி கொண்டதால் விடிய, விடிய தவித்த திருடன் பரிதாபமாக சிக்கி தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.