காலையில் கண்விழித்ததும்
பூமியைப் புதுப்பிக்கும் எண்ணம் உதயம் !
மேலே மரங்களை நகர்த்தினேன்
கீழே விண்மீன்களைக் கிடத்தினேன்
வடக்கே சூரியனையும்
தெற்கே நிலவையும் வைத்தேன்
பூமிக்கு புதிய கோலமிட்டேன்…
கற்பனைகள் தீர்வின் திசைகள்
ஆமாம்-
சற்றே இட வலம் மாற்றிப்பாருங்கள்
வெறும்…
பெயர்ப்பலகை மாற்றங்கள் கூட
சூழலைப் புதுப்பிக்கும் !
அப்படித்தானே….
சிறகடித்த பறவைகளைச் சிறைப்பிடித்து வந்தவன்…
உலோகப் பறவைகளை வானில் உலவ விட்டான்
குண்டூசியைக்கூட மூழ்கடிக்கும் கடலின் மீது
கப்பலை மிதக்க விட்டான்..
கற்பனைகள் காட்சிக்கு விருந்து மட்டுமா ?
கவலைக்கு மருந்துமல்லவா
~~~~~~~~
கவிஞர் ம.திருவள்ளுவர்
திருச்சி