அன்பு, நிதானம், சமயோசிதம், மன உறுதி, சகிப்புத்தன்மை, இந்த ஐந்து குணங்களும் குத்துவிளக்கேற்றும் பெண்களுக்கு கிடைக்கும். இவ்வைந்து குணங்களும் சேர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்பது தத்துவம்.
அடிப்பாகம்:
குத்து விளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரைப் பூப்போல அகன்று வட்டமாக இருப்பதால் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் பிரம்மதேவியைக் குறிக்கிறது.
தண்டுப்பாகம்: குத்து விளக்கின் தண்டுப்பாகம் தூணைப்போன்று உயரமாக இருப்பதால் ஓங்கி வளர்ந்து பூமியை ஓரடியாலும் ஆகாயத்தை ஓரடியாலும் அளந்த நெடுமாலாகிய மஹாவிஷ்ணுவைக் குறிக்கின்றது.
அகல் விளக்கு: குத்து விளக்கின் தண்டுக்கு மேலே அகல் போல் நெய் அல்லது எண்ணெய் ஊற்றப்பட்டுள்ள பாகம், சிவனார் கங்கையைச் சடையுள் வைத்திருப்பதுபோல் இருப்பதால் இப்பாகம் உருத்திரனைக் குறிக்கின்றது.
திரியிடும் கண்:
குத்து விளக்கின் திரி எரிவதற்குரிய 5 முகங்களும் மஹேஸ்வரனை (பஞ்சமுகன்) குறிக்கின்றது.
மேல்தண்டு: அகலின் மேல் கும்ப கலசம் போல் உள்ள உச்சிபாகம் இருப்பதால் ரூபா ரூபத்திருமேனி உடைய சதாசிவனாய் பாவிக்கதக்கது.
எண்ணெய்:
அகல் பாகம் முழுவதும் பரவியுள்ள நெய்யானது உருவமின்றி எங்கும் பரவி நிற்கும் நாத தத்துவத்தைக் குறிக்கின்றது.
திரி:
இந்து தத்துவத்தை அல்லது வெண்மை நிற ஒளியை விளக்குகிறது.
சுடர்:
தீப்பிழம்பு இலக்குமிதேவியின் (திருமகள்) சொரூபமாகக் கருதப்படுகிறது.
ஒளி:
பிரகாசமாய் இருப்பதால் இது ஞானமயமான சரஸ்வதி தேவியின் சொரூபத்தை குறிக்கின்றது.
சூடு:
எரிக்கும் சக்தியானது அழிக்கும் சக்தியாகிய ருத்திராணியின் சொரூபமாகக் கருதப்படுகிறது.
வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனை குத்து விளக்கு ஏற்றி வழிபடுவோம். பகவானின் பரிபூரண அருளை பெறுவோம்.
அனுப்புதல்:
எல். மோகனசுந்தரிகோபி,
பாரதியார் நகர்,
கிருஷ்ணகிரி - 1