வறுமையின் துயர் நீங்க
கால்சிலம்பினை கையளிதாய்
பொறுளீட்ட சென்ற
கள்ளமில்லா கோவலனும்
வீண்பழி சுமந்திட்டே
வீனில் உயிர் நீத்தான்
மாண்டவனின் பழி போக்க
புயலென புறப்பட்டாய்
கொற்றவனின் தவறுரைத்தாய்,
கொண்டவனின் நிலையுரைத்தாய்
மன்னவனும் தலைகுனிந்தான்,
தவறான தீர்ப்பளித்த
தன்னையே
மாய்த்துக்கொண்டான்
பத்தினி தெய்வமாய்,
கற்பின் அரசியாய்
சிலம்பின் நாயகியாய்,
பைந்தமிழ் காவியமானாய்.
-கோபாலன் நாகநாதன்,
சென்னை 33.