tamilnadu epaper

பங்குனி மாத பிறப்பு

பங்குனி மாத பிறப்பு


நாளை(15-3-2025) பங்குனி மாத பிறப்பு நாளில்

ஷடசீதி புண்ணிய

காலம் ஆரம்பம்


இந்த ஷட சீதி புண்ணிய காலத்தில் சிவ வழிபாடு

மகிமை பற்றிய சிறப்பு பதிவு.


இன்று(14-3-25)மாசி மாதக்கடைசி நாள்.

நாளை(15-3-25) பங்குனி மாதப்பிறப்பு.


தமிழ்மாதம் பிறக்கும் நேரம் புண்ணியகாலம் எனப்படுகிறது.


தமிழ்மாதம் பிறக்கும்

துல்லியமான நேரத்தை பஞ்சாங்கம் பார்த்து

தெரிந்து கொள்ள வேண்டும்.


தமிழ் மாதங்கள் 12ல் சித்திரை, ஆடி,

ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. 


பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி,

தை மாதம் பிறக்கும் நேரம் விஷு புண்ய காலம் எனப்படும். 


வைகாசி, ஆவணி,

கார்த்திகை, மாசி ஆகியவை

மஹாவிஷ்ணுவுக்கு உரியவை. 


விஷ்ணுவுக்குரிய மாதங்கள் வைகாசி, ஆவணி,கார்த்திகை, 

மாசி பிறக்கும்

நேரம் விஷ்ணுபதி 

புண்ய காலம் எனப்படும்.


ஆனி,புரட்டாசி,மார்கழி,

பங்குனி ஆகியவை

சிவனுக்குரியவை. 


சிவனுக்குரிய மாதங்கள்

ஆனி,புரட்டாசி,மார்கழி,

பங்குனி பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம்

எனப்படும்.


ஷடாங்கன் என்றால்

சிவபெருமானைக் குறிக்கும்.


ஒவ்வொரு வருடமும் உபய ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு,

மீனம் ஆகிய

ராசிகளில் சூரியன் ஆனி ,புரட்டாசி மார்கழி ,பங்குனி ஆகிய தமிழ் மாதபிறப்பு நாட்களில் பிரவேசிக்கும் காலம் ஷடசீதி புண்ய காலம் எனப்படும்.


நாளை(15-3-25)பங்குனி

மாதப்பிறப்பு அன்று சூரியன் மீனராசியில் பிரவேசிக்கும் 

நேரத்திற்கு பின்னர் வரும்

24 மணிநேரம் ஷடசீதி 

புண்ணிய காலமாகும்.


ஒவ்வொரு வருடமும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி தமிழ் மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.


பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும்.


அதாவது அன்று சிவனையும் பார்வதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும்


இந்த ஷடசீதி புண்ய காலம் தேவர்கள் சிவனை வழிபடும் காலமாகும்.


இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவன் கோவில்,ஜீவ சமாதிகள் அமைந்துள்ள சிவன்

கோவில்களுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.


இந்த ஷடசீதி புண்ய காலத்தில் சிவனை வழிபட்டு பிரார்த்தனை வேண்டுதல் வைத்தால்,

வேண்டுதல் வைப்பவர்களின் பிரார்த்தனை, மற்றும் வேண்டுதல் கட்டாயம் நிறைவேறும்.


ஷடசீதி புண்ணிய காலம் பிறக்கும் நாளில் சிவன், சக்தி வழிபாடு, சித்தர்கள் வழிபாடு, ஞானிகளின் அருள் பெற்று வருவது தனி சிறப்பினைத் தரும்.


சிவ பெருமானுக்கு மிகப் பிரியமான மேஷம், கடகம், கன்னி, கும்ப ராசிகளில் பிறந்தவர்கள் இந்த ஷடசீதி புண்ணிய கால நாளில் சிவன், சக்தியை வழிபடுவது கூடுதல் சிறப்பு ஆற்றலையும் மன மகிழ்ச்சியையும் தரும்.


இந்த நாளில் சிவன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை, ஆராதனை செய்து வருவது சிறப்பு. 


இன்றைய தினம் முழுவதும் முடிந்தவரை சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும். 


நினைத்தது நிறைவேறும்

இந்த நாளில் சிவன், சக்தியிடம் நீங்கள் வைத்த கோரிக்கை, அடுத்து வரும் மூன்று ஷடசீதி புண்ணிய காலத்திற்குள் நிச்சயம் நிறைவேறும்.


இந்த நாளில் பித்ரு தர்ப்பணம் செய்தால், பித்ருக்களின் ஆசியும், உதவிகளும் நிச்சயம் கிடைக்கும். 


திரு என்று தொடங்கும் ஊர்களில் உள்ள சிவன் கோயில்களை வழிபட்டு வருவது சிறப்பினைத் தரும்.


சிவபெருமான் கடவுள்களுக்கு 

எல்லாம் கடவுள். 


தேவர்களுக்கு எல்லாம் தேவர் மகா தேவர், மகேஸ்வரன். 


சிவன் எளிமையானவர். சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்...


சிவனின் அடி முதல் முடி வரை நமது வாழ்வியல் குறித்தும் பண்பு நலன்கள் குறித்து சூசகமாக பல விசயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன


சிவனின் தோற்றம்

சிவன் எளிமையானவராக இருந்தாலும் அவரது உடல்திறன் வலிமையானது. திடகாத்திரமாகவும் இருக்கும். 


இதன் மூலம் எளிமையானவர்களின் வாழ்க்கைதான் வலிமையாக திடமான நிலைக்கு செல்லும் என்பதை உணரலாம்...


ஜடாமுடி, நெற்றிக்கண், திரிசூலம், சாம்பல் பூசிய தோற்றம், நாகம், நீலகண்டம், உடுக்கை, நாகம், கங்கை கமண்டலம் என அனைத்துமே மனித வாழ்க்கைக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது. 


நான் எனும் அகங்காரத்தை விட்டுவிட்டால், உங்கள் மனநிலையும் மற்றும் உடல்நிலையும் மேலோங்கும் என்பதை சிவனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்...


திருச்சிற்றம்பலம் 


சிவாயநம ஓம் நமசிவாய