உன் வீட்டுக்கான சாலை போல்❤️
படுக்கையில் ஒத்திகை நிகழ
மரணம் ஒரு பிரளயமாகிப்போகிறதே❤️
உன்னுடன் சங்கமிக்கும் நொடிகளில்
இறப்பின் துளிகளை இழந்துபோகிறேன்❤️
வாழ்க்கையின் மொத்த காலமும்
மரணத்தின் கணக்கில் கழிந்தே போகிறது❤️
உன்னிடம் கொண்ட என்காதல் பரிசென
என்னை சபித்து மரணத்தை தருகிறது❤️
நீ தந்த நேசம்
மரணத்துக்குள் உறைந்த ஜனனம்❤️
காமம் தந்த சுவைகளில் புரிகிறது
கசப்புக்குள் கசியும் இனிமை ருசியென்று❤️
ஜவஹர் பிரேம்குமார்❤️
பெரியகுளம்❤️