ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் இருக்கிறது.
1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது;
_காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது; *முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்; அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;*_ _இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்; அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே!_
அப்படி முன் பதிவு செய்தால்,இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்; உணவும் கிடைக்கும்; இலவசமாக! தனியாக செல்லலாம்; தம்பதியாகச் செல்லலாம்; நண்பர்களாகச் செல்லலாம்; ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடு;
இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம்; 1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால்,இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது;
இங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக,நமது நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே குணமாகிவிடும்; சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும்; அதுவும் சரியாகி விடும்; ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்; சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற முடியும்; கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு இது;
இந்த *ஆசிரமத்தை ஆரம்பித்தவர் சமர்த்த ராம தாஸரின் வம்சா வழியைச் சேர்ந்தவர்;(சமர்த்த ராமதாஸர், மகாராஷ்டிர மாநிலத்தில் தேச பக்தியைத் தூண்டிய வீர சிவாஜியின் குரு ஆவார்) இல்லத் துறவியாக இருந்த இவர், இந்தியா முழுவதும் நடந்தே பயணித்தவர்; ராம நாம கீர்த்தனையை தனது தந்தை யிடமிருந்து பெற்றவர்; தனது வாழ்நாளில் சில கோடி தடவை ஜெபித்தவர்;*
*இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமண மகரிஷி; இவருடைய சீடர் தான் விசிறிச் சாமியார் என்று அழைக்கப்படும் யோகி ராம் சுரத்குமார் ஆவார்;!*
அந்த ராம நாம கீர்த்தனை:
*ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா..!!*
இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம்;மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது; உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்;
ஆனந்த ஆஸ்ரமம், காஞ்சன்கோடு, கேரளா;
ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்! !
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்!
-Anandashram,
Anandashram P.O.,
Kanhangad - 671531
Dist. Kasaragod, Kerala, India.
Tel: (0467) 2203036/ 2209477
ஸ்ரீராமஜெயம்.! ஸ்ரீ ராம ஜெயம்..!!