tamilnadu epaper

ஸ்வாமி கோயில்களில் கருட வாகனம் புறப்பாடு

ஸ்வாமி கோயில்களில் கருட வாகனம் புறப்பாடு


எப்போதும் கருடவாகனத்தில் பயணிப்பவன் பகவான்.


ஆனால் இந்த ஹனுமந்த வாகனம் 

ஏன் ஏற்படுத்தினார்கள்.


ஹனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை.


அவன் ஒரு சிரஞ்சீவி இன்னும் பூமியில் தானே வசிக்கிறான். 


அப்படியிருக்க ஏன் ஹனுமந்த வாகனம் என ஒரு கேள்வி எழும்.


அதற்கான பதில் உங்களுக்காக.


இராமாயணத்தில் ஶ்ரீஇராம இராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு.


ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை ஶ்ரீராமானுஜனான லக்ஷ்மணன் முதலில் எதிர்த்து போரிடுகிறான்


இராவணன் எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச் செய்து கொண்டே வருகிறான்.


ஒரு சில நிமுடத்துளியில் லக்ஷ்மணன் விட்ட அம்பு இராவணனின் பத்து கைகளிலில் இருந்த ஆயுதங்களையும் கீழே விழச்செய்ததுடன் மேலும் தீவீரமாக ராவணனுடன் போர் புரிய தொடங்குகிறான்


லக்ஷ்மணன் போர் திறமையை கண்டு வியந்த ராவணன் லக்ஷ்மணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது 

என கண்டு கொண்டு பிரம்மா விஷேமாக தனக்கு தந்த அஸ்திரத்தை லக்ஷ்மணன் மேல் ஏவுகிறான்.


தன் மார்பை நோக்கி வரும் அஸ்திரதின் மகிமையை உணர்ந்த லக்ஷ்மணன் அதனை எதிர்க்காமல் விட அந்த அஸ்திரம் மார்பில் பட்டு லக்ஷ்மணன் மூர்ச்சை ஆகிறான்.


இராவணன் வேகமாக வந்து லக்ஷ்மணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான்.

 

அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை. 


பத்து கைகளை கொண்டும் முயல்கிறான். 


முடியவில்லை


இதை தூரத்தில் இருந்த கவனித்த ஹனுமான், 


லக்ஷ்மணன் உடல் அருகே வேகமாக வந்து ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் காக்கும் தாயைப் போல இலக்ஷ்மணனை கைகலால் தூக்கி கொண்டு இராவணன் கண்முன்னாடியே வேகவேகமாக ஶ்ரீஇராமன் இருக்குமிடம் சென்றடைந்தான்.


மூர்ச்சையாகிக் கிடந்த லக்ஷ்மணனை ஶ்ரீராமனின் எதிரே கிடத்தினான்.


செயலற்றவனாய் மூர்ச்சையாகி கிடந்த லக்ஷ்மணனைப் பார்த்து தன்னிலை இழந்த ஶ்ரீராமன் சற்றைக்கெல்லாம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு


மிகுந்த சினம் கொண்டு தம்பியை இந்நிலைக்கு ஆளாக்கிய இராவணனை போரில் சந்திக்கப் புறப்பட்டான்.


அதே நேரம் இராவணனும் ஶ்ரீஇராமனுடன் போர் புரிய எண்ணி ஶ்ரீஇராமன் முன் தனது தேரை கொண்டுவந்து நிறுத்த,


அதர்மத்தையே தொழிலாக கொண்ட இராவணன் தேரில் போரிட வருகின்றபோது,


தர்மத்தின் தலைவனான ஶ்ரீராமன் அவனெதிரே வெறும்தரையில் நின்று கொண்டிருப்பதை கண்ட வாயுபுத்திரன்


மனம் நெகிழ விழிகளில் அவனறியாமல் கண்ணீர் சுரக்க,


ஶ்ரீராமன் அருகே சென்று இருகரம் கூப்பி,


நாத்தழுதழுக்க ஶ்ரீஇராமனை பார்த்து


ஐயனே அந்த அதர்ம சொரூபமான ராவணன் ஆயிரம் குதிரை பூட்டின தேரில் உங்கள் முன் போரிட வந்துள்ளான்


அவன் எதிரில் தர்மமே வடிவமான தாங்கள் வெறும்தரையில நின்று போரிட போவது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது


தேவரீர் அடியேனை ஒரு அல்பமான வானரம் என எண்ணாமல் பெரிய மனது கொண்டு என்னோட தோள்மேல ஏறிகொண்டு அவனுடன் போரிட வேண்டும் என வேண்டினான்.


அனுமனின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தித்த இராமனின் விழியோரம் நீர்துளிர்க்க,


ஹே வாயுபுத்ரா 


எனக்கு இதை விடச் சிறந்த உபகாரம் இந்நேரத்தில் வேறென்ன இருக்க முடியும்.


அதுவும் இல்லாமல் உன்னை போன்ற அன்பான சீடன் என்னுடன் இருக்கும் போது எனக்கு ஏதுகுறை என சொல்லிக்கொண்டே 


அனுமனின் தோள்களில் ஏறி அமர்ந்தான் தசரத நந்தன்.


அவ்வளவு தான் ஹனுமன் இக்காலத்தில் தன்னால் மனைவியின் மூலம் பெறப்பட்ட சேயை தலைமேல் பெருமையுடன் தாங்கி செல்லும் தகப்பன்மார்கள் போல் ஆனந்தத்தில் ஜொலி ஜொலித்தான்.


ஶ்ரீராமனோ மேன்மை மிகுந்த மேருமலை மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் ஒரு ஆண்சிங்கம் போல் ஹனுமன் தோளில் காட்சி கொடுக்க,


இந்தக் காட்சியை கண்ட விண்ணுலக தேவர்கள் தங்களது நல்லாசியை இருவருக்கும் பூமாரி பொழிந்து வாரி வழங்க,


காலம் காலமாய் நடந்தால் குடையாக, 


நின்றால் மரவடியாக சயனித்தால் படுக்கையாக,  


திருமாலை தாங்குகின்ற பெருமையை கொண்டிருந்த ஆதிசேனும் 


திருமாலுக்கு ஊர்தியாய் வாயுவேக மனோவேகமாய் எப்போதும் சுமந்து செல்லும் பெரிய திருவடியான கருடனும்  


பொறாமை கொண்டு நாணி தலை குனிந்தனர்


ஹனுமனின் மீதமர்ந்த ஶ்ரீஇராமனோ ஹே வானரவீரா


வெகுகாலமாக நான் தேடிய எனக்கேற்ற வாகனம் ஆசனம் இன்றே கிட்டியது என்னும் விதமாக அனுமனின் தோள்களில் வெகு பாந்தமாய் ஆரோகணித்திருந்தான்


அதே கோலத்துடன் இராவணனுடன் அதிதீவீரமாக போர் புரிந்து அவனது அரக்கர் படைகளையும் அழகிய தேரையும்,


பலவித அஸ்திரங்களையும் அவனின் வில்லையும் செயலிழக்கச்செய்து நிராயுத பாணியாக நிறுத்தி,


ஹே ராவணா நிராயுதபாணியான உன்னை இன்று கொல்ல மனம் ஒப்பவில்லை.


நீ இன்றுபோய் நாளை வேறு மீதமுள்ள படைகளுடன் வா என கூறி அனுப்பியது வரலாறு.


அந்த போர்களதில் ஶ்ரீராமனின் வாகனமான ஹனுமந்த வாகனத்தை நினைவு கூறவே இன்றும் பூர்வர்களால் ஏற்படுத்தபட்டு இன்றும் வைணவ திவ்ய அபிமான கோயில்களில் ஹனுமந்த வாகனம் மேல் பகவான் புறப்பாடு கண்டருளபடுகிறது.


எப்போதெல்லாம் ஹனுமந்த வாகனத்தில் பகவானை காண்கிறோமோ அப்போது எல்லாம் இந்த நிகழ்வு நினைவுக்கு வரவேண்டும்.


ஶ்ரீராமதூதனான ஹனுமனை போல் பகவத் கைங்கர்யம் செய்ய மனம் துடிக்க வேண்டும்.


ஹனுமன் வானரமோ, மானுடமோ அல்ல அவன் அளப்பறிய இயலாத சக்தி கொண்ட ஶ்ரீராம தூதன்.


எனவே ஹனுமந்தனை போல் ஶ்ரீராமனை தூக்கி கொண்டு போக இயலாவிடினும்,


அந்த வாகனத்தை எழுந்தருள பண்ணும் ஒரு ஶ்ரீபாதம் தாங்கியாகவாவது இருப்போம்.


அனைத்து பகவத் ஶ்ரீபாதம் தாங்கும் அன்பர்களுக்கும் இக்கேள்வி பதில் சமர்ப்பணம்.


ஜெய் ஶ்ரீராம்