tamilnadu epaper

"விழியற்ற தராசு"

"விழியற்ற தராசு"

நன்மை தீமையை
எடையிட்டுப் பார்த்தோம்// 

நாகரீகம் தொலைந்ததில்
நன்மையிங்கு தோற்றது//

நல்லவரையும் தீயவரையும்
நிறுத்துக் கண்டதில்//

தோற்றார் நல்மனத்தார்
வென்றார் தீக்குணத்தார்//

நியாயமும் அநியாயமும்
நேருக்குநேர் மோதிட//

சுருண்டது நியாயமனம்
திரண்டது அநியாயகுணம்//

கோளாறு எங்கென்று
குடைந்து தேடிட//

தராசுக்கு விழியில்லை
தர்மமும் நினைவிலில்லை//

வேருக்கு வென்னீர்
பாய்ச்சியவர்க்கு பன்னீர்//

தியாகங்கள் புரிந்தோர்க்கு
தினம்தினம் கண்ணீர்//
------
முகில் தினகரன், கோவை