tamilnadu epaper

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார்

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார்

இஸ்லாமாபாத், மே 28-

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீப், இந்தி யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். காஷ்மீர், பயங்கரவாதம், நீர் மற்றும் வணிகம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளைப் பற்றியும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவ தற்கு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரான் சென்றிருந்த அவர், அந்நாட்டு தலைநகரில் நடைபெற்ற ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, அமைதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். காஷ்மீர் பிரச்சனை , நதி நீர் பிரச்சனை வணிகம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என இரு நாடுகளுக்கும் இடையே நிலவுகின்ற அனைத்துப் பிரச்சனை கள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புகி றோம் என அவர் அறிவித்தார். எனினும் இந்தியா போரின் பாதையை தேர்ந்தெடுத்தால், அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் கூறியுள்ளார். இந்தியா ஆக்கிரமிக்க முடிவு செய்தால், சில நாட்களுக்கு முன்பு செய்ததைப் போல் நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாப்போம். இதே வகையில் இந்தியா அமைதிக்காக நாங்கள் விடும் அழைப்பை ஏற்றால், நாங்கள் உண்மையிலேயே அமைதியை தான் விரும்புகிறோம் என்பதை நிரூபிப்போம்” என்று அவர் தெரிவித்தார்.