தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி, V.P.கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாளுக்கு நேற்று (30.05.2025) ஆங்கில மாதம் கடைசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை திருமஞ்சனமும், மாலை ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் உள்புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை சிறப்பாக நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் ஊஞ்சல் சேவை குழு மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.
செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*