டிரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்காவில் இருந்து சுமார் 71 சரக்கு கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில் வரும் மே மாதம் அமெரிக்காவின் அனைத்து வகையான உதவிகளும் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது எனவும் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.