அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி திருவண்ணாமலையில் ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா ரத்த தானம் செய்வது போல் கையை மட்டும் காண்பித்தபடி வீடியோ வெளியானது.
ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைப்பார் என கூறப்பட்ட நிலையில் வீடியோவுக்காக மட்டும் போஸ் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ரத்த தானம் செய்வது போன்ற வீடியோ வெளியான நிலையில் இதுதொடர்பாக அ.தி.மு.க. செயலாளர் ஜெயசுதா விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
ரத்த தானம் செய்வதற்காக தயார் செய்தார்கள். எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை அளவு எவ்வளவு என்று கேட்டார்கள். 210 என்று சொன்னதும் ரத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். இதில் ஒன்றும் இல்லை.
நான் ரத்த தானம் கொடுத்ததாக பேட்டி கொடுத்தேனா? என விளக்கம் அளித்துள்ளார்.