tamilnadu epaper

கள்வனே

கள்வனே


 ,ஒரு நிமிட பார்வையால் என் இதயத்தை தட்டிப்பரித்துவிட்டாய்.

ஒரு வினாடி நினைவால் என் மதியை இழந்தேன். உன் கரங்கள் சேர காத்திருக்கிறேன் .

இரு கண்கள் சேர உன்னை காணவில்லையே. 

உன் நினைவால் நான் வாடுகிறேன் .

சிலரின் உறவாய்

 நீ வாழுகிறாய். ஆழ்கடலில் எழுகின்ற நீர்க்குமில் போல தவிக்கும் என் இதயத்திற்கு 

 நான் என்ன சொல்லி புரிய வைப்பேன் ?

நீ என்னவன் தான். ஆனால் ,எனக்கானவன் இல்லை என்று 

நிழல் தரும் மரமாக நான் இருக்கிறேன் .

சற்று ஓய்வெடுக்கும் மனிதனாக நீ வருவாயா ?

இப்படிக்கு 

 உன் கரம் பற்ற காத்திருக்கும் தொலைநோக்கு காதலி


-நாக ஜெயந்தி

கடத்தூர்