துணிந்த உள்ளம் தூய வெள்ளாடை
பணிந்த சேவை பன்முகத்
திறமை
ஈன்ற மகவை எளிதில் மறந்தாலும்
தோன்றும் பணியைத் தொடரா விடினும்
பெற்றோர் பெரியோரைப்
பிள்ளை மறந்தாலும்
உற்றம் சுற்றம் உறவுகள்
மறந்தாலும்
கதிரவன் காரிருள் கலைக்கா விடினும்
மதியோ ஒளியை மண்ணில் மறைத்தாலும்
பசித்தபோது உணவீந்து
உடல் நலம்
பாதித்த போது பாசமோடு மருந்தீந்து
கையது கொண்டு மெய் தூக்கி
களங்க மின்றி பணி
செய்கின்றீர்
தரணி நிலைக்க தாய்மார்க் குதவி
பரணி பாட வைக்கும்
செவிலியரே
செவிலி யென்றால் தாய்
அன்றோ
செய்யும் சேவையில் குறை உண்டோ
கைவிளக்கு ஏந்திய காரிகையும் செவிலியரே
காலங் காலமாய் காருலகில் நிற்கின்றார்
சிந்தையில் நிறைந்த செய்கை யினால்
செவிலியரே நீவிர் நீடு வாழ்க
-சிவ .சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி