tamilnadu epaper

குபேரர் வழிபாடு!!

குபேரர் வழிபாடு!!

 

 

அள்ள அள்ள குறையாத செல்வத்தை பெற... குபேரர் வழிபாடு!! 

 

?செல்வத்தின் அதிபதியாக திகழும் குபேரனுக்கு பல்வேறு பெயர்கள் இருந்தாலும் அவரை நினைவூட்டுவது என்னவோ அவர் கையில் வைத்திருக்கும் பணம் தான். பணம், பொருள், நகைகள் போன்ற அத்தனை செல்வங்களையும் வாரி வழங்கக்கூடிய குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழக்கிழமை ஆகும்.

 

?வெள்ளிக்கிழமையில் எப்படி மகாலட்சுமியை வேண்டி வழிபடுகிறோமோ, அதேபோல வியாழக்கிழமையில் குபேர வழிபாடு செய்வது சிறப்பு.

 

?குபேரர் செல்வத்தின் கடவுள் என்பதால், அவரை வழிபடுவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

 

வியாழக்கிழமையில் குபேரனை எவ்வாறு வழிபடலாம்?

 

?வியாழக்கிழமையன்று காலை குளித்து முடித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும்.

 

?வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.

 

?பின்னர் வீட்டில் எப்போதும் விளக்கேற்றும் பூஜையறையில் குபேரர் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

 

?நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே குபேர பூஜையின் பொழுது கட்டாயம் நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும் என்பது சிறப்பிற்குரியது.

 

?பிறகு அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஏனென்றால் குபேரருக்கு மிகவும் பிடித்த உணவு அவல் ஆகும்.

 

?இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

குபேர விளக்கு பூஜை வழிபாடு :

 

?குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று இந்த விளக்கு பூஜையை நாம் செய்ய வேண்டும்.

 

?குபேர விளக்கு (அல்லது அகல் விளக்கு) மற்றும் மனை அல்லது தட்டிற்கு மஞ்சள், குங்குமத்தை ஒற்றைப்படையில் வைத்து அலங்கரித்து கொள்ளுங்கள்.

 

?குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டில் பச்சரிசியை பரப்பி, அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து கொள்ளுங்கள்.

 

?பின்பு குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேரருக்கு உகந்த பச்சை நிற திரி கொண்டு விளக்கு ஏற்றுவது மிகச்சிறப்பு. பச்சை நிற திரி இல்லையெனில் பஞ்சு திரியையும் பயன்படுத்தலாம்.

 

?குபேரருக்கு உகந்த வடக்கு திசை நோக்கி குபேர விளக்கை (அல்லது அகல் விளக்கு) ஏற்ற வேண்டும். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்த்து விளக்கை சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும். கற்கண்டு சேர்ப்பது பணவரவை அதிகரிக்க செய்யும்.

 

?குபேர விளக்கு ஏற்றிய பின் வீட்டின் நிலை வாசலில் குபேரருக்கு உகந்த வடக்கு திசையில் விளக்கை வைக்க வேண்டும்.

 

ஏன் இந்த விளக்கை நிலை வாசலில் ஏற்ற வேண்டும்?

 

?செல்வத்தின் அதிபதியான குபேரனை வீட்டின் வாசலில் வைத்து பூஜித்தால், நமது செல்வத்திற்கு பாதுகாப்பும், செழிப்பும் உண்டாகும்.

 

?குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது.

 

?ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணியிலிருந்து 8 மணிக்குள் உங்கள் வீட்டு நிலை வாசற்படியில் இவ்வாறு வடக்கு திசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வர உங்கள் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

 

வீட்டில் குபேரர் சிலையை எந்த பக்கம் வைக்க வேண்டும்?

 

?குபேரர் செல்வத்திற்கு அதிபதி. இவர் வடக்கு திசைக்கு உரிய காவல் தெய்வம் ஆவார். இவர் வடக்கு திசையில் இருந்து உலகை பாதுகாக்கிறார். இவர் பூமியில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்திற்கும் அதிபதி. இவர் பிரம்மாவின் பேரனான விச்வரஸ் என்பவருக்கு மகனாக பிறந்தவர்.

 

?வடக்கு திசையானது குபேரனுக்காக இருப்பதால் வீடுகளில் பணம் அல்லது நகைகள் வைக்கும் பெட்டி அல்லது 'பீரோ' வடக்கு திசை பார்த்து திறப்பது போல இருக்கவேண்டும்.

 

?தென்கிழக்கு பகுதியில் உள்ள அறை அல்லது மற்ற அறைகளில் உள்ள தென்கிழக்கு மூலையில் பணம் அல்லது நகைப்பெட்டியை வைக்க கூடாது.

 

?அக்னி பாகம் தவிர மற்ற அறைகளில் பணம் வைக்கும் 'பீரோவை' வைப்பதென்றால், அதன் தென்மேற்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கியபடி வைக்க வேண்டும்.

 

?குபேரரின் திசையான வடக்கு திசையில் குபேர சிலையை வைத்து வழிபடுவது மேலும் செல்வம் சேர வழிவகுக்கும்.

 

பலன்கள் :

 

?குபேரர் செல்வத்தின் அதிபதியாக இருப்பதால், அவரை வழிபடுவதன் மூலம் செல்வம் பெருகும்.

 

?கடன் சுமையால் அவதிப்படுபவர்கள் குபேரரை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி பெறுவார்கள்.

 

?தொழில்/வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க குபேர வழிபாடு உதவும்.

 

?குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, செழிப்பு நிலவுவதற்கு குபேர வழிபாடு சிறந்தது.

 

?நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை பெற குபேர வழிபாடு உதவும்.