செய்யாறு மே. 31,
செய்யாறு அடுத்த கூழமந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று 2025-2026 கல்வி ஆண்டுக்கான 6 முதல் 10 ஆம் வகப்பிற்கான மாணவர் சேர்க்கை வேண்டி கல்லேரி, உக்கம்பெரும்பாக்கம், மகாஜனம்பாக்கம் ஆகிய ஊர்களில் வீடு,வீடாக துண்டு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுந்தரம், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் க.நாசர், வளர் தமிழ் மன்ற சமூக ஆர்வலர் ராசீ. வெங்கட்ராமன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜா.சாந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.