tamilnadu epaper

சனி தசை, அஷ்டம சனி, எழரை சனி பரிகாரம்

சனி தசை, அஷ்டம சனி, எழரை சனி பரிகாரம்


    ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம்.

      எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமராங் ஆகி திரும்ப கிடைப்பது அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புத்தி நடக்கும் காலங்களில், அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் --சனி பகவான் தயவு தாட்சண்யமின்றி கொடுமையாக தண்டிக்கிறார்.

        நான் ஒண்ணுமே செய்ய முடியாது. என் கையிலே ஒண்ணுமே இல்லை. நான் ஒரு கையாலாகாதவன். கோழை. யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. நான் ஒரு அனாதை. நான் உயிரோடு இருக்கிறதே வேஸ்ட்.என்ன பண்ணினாலும், எவ்வளவு சாம்பாதிச்சாலும் கையில் பைசா நிக்கவே இல்லை. இப்படி பலப் பல எண்ணங்கள் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு அஷ்டம சனியோ, இல்லை ஏழரை சனியோ நடந்து கொண்டிருக்கும்.

        சிவனேனு நீங்க பாட்டுக்கு டூ வீலர்ல போய்க் கிட்டு இருப்பிங்க. சம்பந்தமே இல்லாமே திடீர்னு ஒரு நாய் தேடி வந்து உங்களுக்காகவே வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த மாதிரி உள்ளே வந்து விழும். அப்புறம் என்ன, ஒரு மாசம் கட்டு போட்டு உக்காரணும்.

        உற்றார் உறவினரை விட்டு ஆயிரக் கணக்கான மைல் தள்ளி இருக்க வேண்டி வரும். நாம் ரொம்ப நேசிக்கிற பொருள், உயிர் நண்பர்கள் எல்லாரையும் வெறுத்து ஒதுக்க வேண்டி வரும். அவரை மாதிரி ஒரு உத்தமன் உண்டானு சொல்லிக்கிட்டு இருந்த உலகம் இப்போ கை கொட்டி சிரிக்கும்.

        கவலையே படாதீங்க.. இப்போ தான் நீங்க ஒரு பக்குவப்பட்ட மனுஷனா மாறி இருப்பீங்க. அசலுக்கும் போலிக்கும் இப்போதான் வித்தியாசம் பார்க்க முடியும். நீங்க செஞ்ச பாவக்கணக்கு நேராகுதுன்னு நினைச்சுகிட்டு மனசை தேத்திக்கோங்க.

          ஆண்டவனுக்கு தெரியும், நமக்கு எது எப்போ கிடைக்கனும்னு மேல நடக்க வேண்டியதை பார்க்கலாம். இதுக்கு மேல நீங்கதான் ராஜா! கலக்கப் போறீங்க.

       இது எல்லாமே சனியால் அவஸ்தை பட்டவங்களுக்கு நல்லா புரியும். மத்தவங்களுக்கு ஒரு காமெடியா தெரியலாம். கீழே கொடுக்கப்பட்டிருக்கிற விஷயம் யாரும் சனியோட கடுமையால் பாதிக்க படக்கூடாதுங்கிறதுக்காக.....


   ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்.


    பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும்.

         வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்யவும்.

         அப்படித்தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். ஏறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.

       இந்த பச்சரிசி மாவை சாப்பிடுவதற்கு எறும்புகள் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பது முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்படி மாறியதும் அதன் வலு இழந்து போய் விடும். இதனால் நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போட வேண்டும்.

       ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்கு சமம். இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

        இதனால் சனி பகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டகச்சனி -சனி மகா தசை நடப்பவர்களுக்கு இந்த செயல் ஒரு மிகப்பெரிய வரப்ரசாதம் ஆகும்.

       உடல் ஊனமுற்றவர்களுக்கு காலணிகள், அன்னதானம் அளிப்பது நல்லது.

      உங்களால் முடிந்த அளவுக்கு, உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள்.



-M. ராதாகிருஷ்ணன்.

அஞ்சல் துறை (ஓய்வு )

வளையாம்பட்டு போஸ்ட்

வாணியம்பாடி -635751