செய்யாறு மே .31,
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- பரிதிபுரம் வழுவூர் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பட்டீஸ்வரன் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
நேற்று அருள்மிகு ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு ஸ்ரீ பட்டீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் முன்னிட்டு இன்று கொடியேற்றும் வைபவம் நடைபெற உள்ளது.