tamilnadu epaper

நாற்றுநடும் இளந்தயிர்

நாற்றுநடும் இளந்தயிர்


உயிருள்ள விதையினிலே

உன்னைப்போல்

நானிருந்தேன்


பத்துமாத காலம்வரை

எனக்கில்லை இளந்தளிரே


மண்ணிலே தூவிவிட்டு

கண்திறந்து பார்த்துநின்றான்


மண்ணைத் துளைத்திங்கு

மகப்பேறு நடந்ததிங்கு


எல்லாரும் ஒன்றாக வளர்ந்து மகிழ்ந்திருந்தோம்


தினம்தினம் நானும்வந்து

வளர்ச்சியைப் 

பார்த்திருந்தேன்


பகிர்தல் நல்லதுதான்

இடைவெளி சிறந்ததுதான்


கட்டுக்கட்டாய் நாற்றுகளைக் கட்டிவைத்தோம் நாங்களுமே


செழித்து வளரவேண்டி

பிரித்து நடுகிறோமே


இளந்தளிர் நாற்றை

எடுத்தது இளந்தளிர்


நெல்விளைஞ்சி செழிக்க 

நிற்கும் இளநாற்று


வளரும்போது தெரிய

விவசாய பூமிநமது


நன்றுநன்று தளிரே

நாடுபோற்றும் தானே


-பானுமதி நாச்சியார்