மக்களுக்கு கேடு விளைவிக்கும் அசுரர்கள், கயவர்களை அழித்து மக்களை காத்து அருள்பவர் விஷ்ணு பகவான். அவரின் வாகனமாக, பெரிய திருவடி என்ற பெயரோடு விளங்கும் கருட பகவானின் ஸ்லோகத்தை சொல்லி வர நோய் தீர்ந்து பலம் பெருகும்.
கருடாழ்வார் கையில் அமிர்த கலசத்தைத் தாங்கி, விஷமுள்ள பாம்புகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியவர்.
மக்களை காக்கக் கூடிய எம்பெருமானுக்கு பெரிய திருவடியாக இருப்பவர்.
தன் கையில் அமிர்த கலசம் கிடைத்தும் சுய நலத்திற்காக பயன்படுத்தாமல், தன் தாயை மட்டும் விடுவித்து மீண்டும் தேவர்களிடம் ஒப்படைத்தவர்.
அவர் இயற்கை குணமே விஷய ஜந்துக்களை அழிப்பதாகும். அதனால் நோய்களை தீர்க்கக் கூடியவராகவும், உடல் பலமும், பல்வேறு நற்பலன்களை அருளக் கூடியவர் கருடாழ்வார். கீழே குறிப்பிடப்பட்டுள்ள இவருக்குரிய ஸ்லோகத்தை தினமும் உச்சரித்து அனைத்து அருளையும் பெற்றிடுங்கள்.
கருட தியானம்
அம்ருத கலச ஹஸ்தம் காந்தி ஸம்பூர்ணதேஹம்
ஸகல விபுதவந்த்யம் வேத சாஸ்த்ரைரசிந்த்யம்
விவித ஸுலப பக்ஷை: தூய மானாண்ட கோநம்
ஸகல விஷவிநாஸனம் சிந்தயேத் பக்ஷிராஜம்.
க்ஷிப ஓம் ஸ்வாஹா:
பொருள்:
அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால் வணங்கப்படுபவரே, இவரின் பெருமையை யாராலும் விவரிக்க முடியாதவராக விளங்குபவர்.
இவரின் இறக்கை காற்று அண்டங்களை எல்லாம் நடுநடுங்கச் செய்யும். இவரை வணங்கினால் பாம்பு விஷம் நீங்கும். சக விஷத்தால் ஏற்பட்ட வியாதிகளும் நீங்கும்.
பட்சிராஜனான கருட பகவானை நான் சிந்தையில் நிறுத்தி ஆராதிக்கிறேன்.
யார், எப்போது துதிக்க வேண்டும் ?
இந்த கருட துதியை நோயுற்றவர்கள் அல்லது அவர்களது சார்பாக யாரேனும் ஒருவர் 1008 முறை விபூதியில் ஜபம் செய்து தரிசனம் செய்தால், விஷத்தால் ஏற்பட்ட பாதிப்பும், நோய்களும் விலகும் என்பது பலரின் அனுபவத்தில் கண்ட உண்மை.
நோய் வாய்ப்பட்டவர் மட்டுமில்லாமல் மற்றவர்களும் இந்த ஸ்லோகத்தை தியானித்து வந்தால் மரண பயம் நீங்கி, நோய் நீங்கி நன்மை கிடைக்கும்.
____________________
அனுப்புதல்
ப. கோபிபச்சமுத்து,
பாரதியார் நகர் பிரதான சாலை,
கிருஷ்ணகிரி-1