அழிந்து வரும் கலை...
சொந்தக் காலில்
நிற்க முடியாமல்
தடுமாறி விழுகிறார்கள்
பொய்க்கால் குதிரை ஆட்டக்
கலைஞர்கள்...
ஆட்டம் காணும்
பொய்க்கால் குதிரை ஆட்டத்தில்
நாட்டம் செலுத்திடுவோம்...
நட்டம் இன்றி கலை வளர
திட்டம் தீட்டி
நம்மால் இயன்றதை
நாளும் செய்திடுவோம்..!
-ம.பாஸ்கர்,
தஞ்சாவூர்.