tamilnadu epaper

போகுமிடம் வெகு தூரமிலை!

போகுமிடம் வெகு தூரமிலை!


நாடக மேடையில் காட்சி முடியும் தருணம் . இரண்டு காட்சிகள்தான் பாக்கி, அதன் பின் நாம் நம் வீட்டிற்கு திரும்ப வேண்டும். 


காட்சிகளை நன்கு நடித்து தாமதிக்காமல் வீடு திரும்ப வேண்டும். அதாவது வாழ்க்கையில மூன்றாவது கட்டத்திற்கு வந்தபின்!!


பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் இதை விவரிக்க ஒரூ கதையைக் கூறுவார்....


ஒரு வழிதான் அரசனிடம் சென்றானாம். அவனிடம் ஒன்றுமே இல்லாததால் அரசனிடம் உதவி கேட்டு போகிறேன். கரூணையுள்ளம் கொண்ட அரசனும்,' உனக்கு என்ன வேண்டும் "? என கேட்கிறான்.


அதற்கு அவன்," விவசாயம் பண்ண சிறிது நிலம் வேண்டும், அது போதும்" என்றான்


அரசன் அவனிடம்," நாளை இதே நேரம் இங்கு வா . இங்கிருந்து ஒட ஆரம்பி, எவ்வளவு தூரம் ஓடுகிறார் அவ்வளவு நிலம் உன்னுடையது . ஆனால் ஒரு நிபந்தனை. வேண்டியமடைடும் ஓடிவிட்டது பொழுது செய்வதற்காகவும் ஆரம்பித்த இடத்திற்கு வந்து விட வேண்டும். வராவிட்டால் உனக்கு எதுவும் கிடையாது. " என்றான்.


மறுநாள் விடிந்ததும் அவன் அரசன் குறிப்பிட்ட இடத்திலிருந்து ஓடவாரம்பித்தான் . ஓடிக் கொண்டே இருந்தான் உச்சி வேளை வரை. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என ஓடிக் கொண்டே இருந்தான்.


பொழுது சாய்ந்தது தான் திரும்ப வேண்டியதைப் பற்றிய ஞாபகம் வந்தது.அப்புதுதான் தான் வெகு தூரம் வந்து விட்டதை உணர்ந்தான். திரும்ப வேண்டிய அவசரத்தில் திம்பி ஓட ஆரம்பித்தான். மிக களைப்பாக இருந்தது, ஓட முடியவில்லை. மூச்சிறைக்க. சிறிது நேரத்தில் உயிரற்ற சடலமாக கீழே சரிந்தான்.


இதை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த அரசன் அவனருகில் சென்று,' இவனுக்கு வேண்டியது சிறிது நிலம், காரணமில்லாமல்' என வருந்தினான் தொலை தூரம் ஓடி உயிரை மாய்த்துக் கொண்டான்.


அவன் திரும்பி வர எண்ணினான் .ஆனால் திரும்பிய வரமுடியாத இடத்திற்குக் சென்று விட்டான்.


நானும் வாழ்க்கை பந்தயத்தில் ஓடி ஓடி எங்கு நிற்கிறேன் இப்போது?ஓடிக் கொண்டே இருக்கிறேனே! சூரியன் அஸ்தமித்து கூட தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். திரும்பி வர தெரியாத நான் என்ன அபிமன்யுவா? நாம் எல்லோருமே திரும்பி வரத் தெரியாத அபிமன்யுக்கள்தான் !!

உண்மை என்னவென்றால்...


திரும்பி வரத் தெரிந்தவர்கள் வாழ் தெரிந்தவர்கள் ,ஆனால் திரும்பி வருவது அவ்வளவு எளிதல்ல.


டால்ஸ்டாய் கதை கதாநாயகன் சமயத்தில் திரும்பி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றியது.


-பல்வந்த் ஜெயின்