சித்திரை மகள் சிறப்புடன் வந்தாள். வாழ்த்துகள்.
அலைபேசி கோபுரங்களை குடியிருப்பு பகுதியில் அமைப்பதே கதிர் வீச்சு பாதிப்பு உண்டு பண்ணும் என்று வெகுநாட்களாக
பேச்சடிபடும்போது வீட்டின் மேலேயே வைத்தால் அதன்குணத்தைக் காட்டி விட்டது.
ஆட்சிக்கு வரலே அதற்குள்ளேயே அப்பாவுக்கும் மகனுக்கும் நீ தலைவர் நான் தலைவர்னு சண்டை.
மியான்மரில் மீண்டும் நில அதிர்வு சேதம்
தென்கொரியாவில் பாலம் இடிந்து சேதம்.
உக்ரைனில் இந்திய மருந்துக் கம்பெனி ருசிய இராணுவத்தால் தாக்கப் பட்டு சேதம் என பலப்பல அழிவுச் செய்திகள்.
சித்திரை வந்தாலே வெயில் ஒருபக்கம் என்றாலும் சித்ரா பெளர்ணமி தொடர்ந்நு திரு விழாக்கள் தேரோட்டத்
திற்குப் பஞ்சம் இருக்காது.
ரிஷிவந்தியாவின் நறுக்ஸ நொறுக்ஸில்
போதிமரம் வெட்டி கொண்டாடப் பட்டதாம்
புத்தரின்பிறந்ததினம்.
சாதிமரம் வெட்டுவதற்குப் பதில் போதிமரத்தை வெட்டி விட்டார்கள்.போலும்.
பேரிக்காய் ஒருநாள் போதுமே .தினந்தினம் திண்ணப் பேரின்பமே.
உக்ரைனில் இந்திய மருந்து நிறுவனம் மீது ரஷ்ய ராணுவத் தாக்குதல் நடந்து சேதமாகி இருக்கிறது. விரைவில் போர்நிறுத்தம் ஆனால் ஒழிய இத்தகைய சேதங்களைக் களைய முடியாது தான்
-சிவ சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி