tamilnadu epaper

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை

பங்குனி உத்திரம் ஸ்பெஷல்


ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழா க் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம்.


பிரம்மதேவன் கொண்டாடிய முதல் உற்சவம் பங்குனி உத்திரம்’ என்கிறது ஸ்ரீரங்கத் தலபுராணம். எனவேதான் திருவரங்கத்தில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவத்தை ‘ஆதி பிரம்மோற்சவம்’ என்கிறார்கள். 


பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நடைபெற்ற ஊடல் முடிவுக்கு வந்து இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நாளில்தான். இந்த வைபவம் ‘சேர்த்தி சேவை’ உற்சவம் என்று ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரப் பெருவிழாவின்போது கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 


பெருமாளுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடல் என்பது உலகமயமான ஊடல் போலத் தோன்றினாலும் அதன் உள்ளார்ந்த தத்துவம் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டம்.


அரங்கனுக்கும் தாயாருக்கும் நிகழ்ந்த ஊடல் குறித்த புராண சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது...


உறையூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சோழ மன்னன் ஒருவனு க்குக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தது. அவனது குறையைப் போக்க மகாலட்சுமியே மகவாக அவதரித்தாள். 


அவளுக்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்துவந்தான் சோழன். ஒருமுறை வேட்டையாடச் சென்ற ரங்கநாதர் கமலவல்லியைக் கண்டு காதல் கொள்கிறார். 


ரங்கநாயகி ஸ்ரீரங்கத்தில் இருக்கும்போது, உறையூர் கமலவல்லியைத் தனது மார்பிலிரு க்கும் மகாலட்சுமியின் அனுமதியுடன் திரும ணமும் செய்துகொள்கிறார் ரங்கநாதன். உறையூரில் கோயில்கொண்டிருக்கும் கமல வல்லி நாச்சியாரை ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் சந்திக்கச் செல்கிறார். இதனால் ரங்கநாயகி ஸ்ரீரங்கநாதர் மீது கோபம் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலான ஊடல் மலர்கிறது. இறைவியின் ஊடலும் அது முடிவுக்கு வந்த வைபவமுமே சேர்த்தி சேவை’ எனப்படுகிறது.


உறையூர் கமலவல்லி அவதரித்த நட்சத்திரம் பங்குனி ஆயில்யம். ஒவ்வொரு வருடமும் ரங்கநாதர் பங்குனி ஆயில்யத்தின்போது புது மாப்பிள்ளையைப் போன்று புத்தாடை, சந்தனம், திலகம், மாலை ஆகியவற்றை அணிந்து கொண்டு கமலவல்லி நாச்சியாரை த் தாயாருக்குத் தெரியாமல் சந்திக்கச் செல்வார். பெருமாள் தான் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் மாலைகள் அனைத்தையும் கமலவல்லிக்கு அணிவித்தும் கமலவல்லி நாச்சியார் அணிந்திருக்கும் மாலைகளைத் தான் வாங்கி அணிந்தும் கொள்வார். 


அப்படியொருமுறை, கமலவல்லி நாச்சியாரை ச் சந்தித்துவிட்டு மகிழ்வுடன் ஸ்ரீரங்கத்தை நோக்கித் திரும்பும்போதுதான் தனது கையில் கமலவல்லியின் புது மோதிரம் பளபளப்பதைக் கவனிக்கிறார். பழைய மோதிரத்தைக் கமலவல்லியின் கரங்களில் அணிவித்தது அவரது நினைவுக்கு வந்தது.


புது மோதிரத்துடன் சென்றால் அணிந்திருந்த பழைய மோதிரம் என்ன ஆனது என்று ரங்க நாயகி கேட்பாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது?’ என்று சிந்தித்த ரங்கநாதர் தனது மோதிரம் தொலைந்துபோனதாக நாடகம் ஆடுகிறார். அனைவரும் காவிரியாற்றில் மோதிரத்தைத் தேடுகிறார்கள். 


பிறகு மோதிரம் தொலைந்துவிட்டது’ என்று கூறியபடியே கோயிலுக்குள் நுழைகிறார் ரங்கன். வழக்கமாக ரங்கன் கோயிலுக்குள் நுழைந்தால் வாத்திய கோஷங்கள் அதிரும். ஆனால், கமலவல்லியைச் சந்தித்துவிட்டு வரும் ரங்கனோ சத்தமில்லாமல் வருகிறார். 


ரங்கனின் செய்கையின் பொருளை தாயார் அறியாமல் இருப்பாரா என்ன? 


‘உள்ளே வராதீரும்’ என்று கூறி வாயில் கதவைச் சாத்திவிடுகிறார். 


ரங்க நாயகியைச் சமாதானப்படுத்த, பெருமாள் முயற்சி செய்கிறார். 


தாயாரோ, ‘நீங்கள் உறையூருக்கே செல்லலாம் இனி இங்கு வரத் தேவையில்லை’ என்று உறுதியுடன் தெரிவித்துவிடுகிறார். 


தர்மத்தின் தலைவனுக்கு அரங்கமாநகரில் தர்ம அடி கிடைக்கும் நாள் இன்று அதுவும் அவரது தர்ம பத்தினி கையால்தான்!

 

உறையூர் சென்று கமலவல்லியை நாச்சியாருடன் சேர்த்தி கண்டு விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி கடந்து கோவிலில் ரங்க நாயகி தாயார் சந்நிதியை அடைவார் அரங்கன்..

 

ரங்க நாயகி தாயாரின் அனுமதியின் பெயரில் தான்உறையூர்நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார். புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்துவிடுகிறார்.

 

‘ஆஹா நம் வீட்டுக்குப்போனால் அரங்க நாயகி ‘எங்கே நான் அணிவித்த மோதிரம், புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா?’ எனக்கேட்பாளே என்ன செய்வது ‘ என தவிக்கிறார்..

 

காவிரிக்குப்போய் பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான்; தானும் தேடுகிறான்.

 

 ஒன்றும் கிடைக்கவில்லை!


(இந்தக்காட்சிகள் இன்று அம்மா மண்டபம் காவிரியில் காணக்கிடைக்கும்.. சல்லடை போட்டு நிஜமாவே சலிப்பார்கள் நீரை 


தப்புபண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான் ஆகவேஓசைப்படாமல் (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார்.

 

தாயாருக்கா தெரியாமல்போகும் அரங்கனின் தந்திரம்?

டமால் என வாசற்கதவை சாத்திவிடுகிறாள்.

 

அரங்கன் ஏமாற்றமாய் நகர்கிறான்.

 

மறுபடி கதவைத்திறந்துவைக்கிறாள் அரங்க நாயகி.

 

‘ஆஹா நல்ல சந்தர்ப்பம் வேகமாய் போய்விடுவோம்’ என அரங்கனின் பல்லக்கு அவசர அவசரமாய் வாசல் கதவருகில் வரவும் மறுபடி ‘டமால்’...


‘சரி இனி பல்லக்கில் மறைந்து கொண்டு விடுவோம் வெறும் பல்லக்குதான் வருகிறதென அவள் வழிவிடாமலா போய்விடுவாள்?’ என பல்லக்கில் தன்னை திரைத்துணீயால் மறைத்துக்கொள்கிறான் அரங்கன்.

 

‘ம்ம் மெல்ல ஓசையின்றி உள்ளே செல்லுங் கள்’ என அடியார்களுக்கு ஆணையிடுகிறான் அவர்களும் பூனைப்பாதம் வைத்து நடந்து வாசற்கதவருகில்போகும்போது உள்ளிருந்து வெண்ணைக்கட்டிகளை வீசப்படுகின்றன. புஷ்பங்களையும் சிறு இலைகளையும் தன் அடியார்களைவிட்டு அரங்கனின் பல்லக்கு மீது அடிக்க சொல்கிறாள் தாயார் .


சண்டை துவங்குகிறது! “


“ப்ரணய கலகம்” என்று பெயர்.


தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர்.

பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர். தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.


ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து பின்னோக்கி நடக்கிறார். 


சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார். உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்.. படார். உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது..


இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான் !


கடைசில்தான் மட்டையடி நடக்கும்!


உற்சவத்தின்போது தாயார் சார்பாக ‘தலத்தார்’ எனும் ஊழியர்களும், பெருமாள் சார்பாக தொண்டுக் குலத்தார்’ எனும் ஊழிய ர்களும் சமாதானம் பேசுவார்கள். தலத்தார் எல்லோரும் பெருமாளிடம் நியாயம் கேட்க, குலத்தார் அனைவரும் தாயாரிடம் கெஞ்சுவர் வடக்குச் சித்திர வீதி மக்கள் அனைவரும் அன்னைக்கு ஆதரவாக வெண்ணெய் மற்றும் பூக்களைப் பல்லக்கின் மீது வீசி எறிவார்கள். 


தெற்கு சித்திர வீதி மக்கள் ரங்கனுக்கு ஆதர வாக இருப்பார்கள். கடைசியில் திருவரங்கன் செய்த தவறுக்காக மட்டையடி விழும். உலகா ளும் பரமனுக்கே வாழை மட்டையால் அடிவி ழும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதை மட்டையடி உற்சவம்’ என்று கூறுகிறா ர்கள். கடைசியாக நம்மாழ்வார் இருவரையும் சமாதானம் செய்து சேர்த்துவைப்பார்


மிகவும் மெல்லிய வாழை மட்டை. அதை வைத்து ஒரு சாத்து! மட்டையடி உற்சவம் என்பது இதுதான்.பல்லக்கின்மீது வாழை மட்டைகள் தொடர்ந்து வீசப்படும்.

 

சமாதானம் பண்ண நம்மாழ்வாருக்கு தூதுபோகிறது..நம்மாழ்வாரின் பல்லக்கு வீட்டு வாசலுக்கு வந்து விடுகிறார்.

 

அரங்கனின் பல்லக்கை ஏறிடுகிறார்.


படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....


இப்படியே மூன்று முறை! 


ஒரே கலாட்டா தான் !


கடைசியில் மட்டையடி ஆரம்பமாகிறது!


மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து!


மட்டையடி உற்சவம் என்பது இதுதான். பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும். விஷயம் நம்மாழ்வாருக்கு போகிறது .. சமாதானம் பண்ண நம்மாழ்வாருக்கு தூதுபோகிறது...


நம்மாழ்வாரின் பல்லக்கு, வீட்டு வாசலுக்கு வருகிறது...

 

அண்ணலின் பல்லக்கை ஏறிடுகிறார்.

 

பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!


அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?

வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே இவருக்குத் தாளவில்லையே.


இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்? கம்சனி ன் வயிற்றில் நெருப்பென்ன நின்றான்?நம்மாழ்வார் தாயாரைப் பார்த்துக் கேட்கிறார்...

 

“அரங்கவல்லியே!நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்? அப்போ சரியென்று சொல்லிவிட்டு,

இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?

 

 நம்மாழ்வார் தாயாரைப்பார்த்துக்கேட்கிறார்.

 

”பங்குனி உத்திரம், உன் பிறந்த நாள் வேறு. இன்று உன்னோடு இருக்க ஓடி வந்தவனை இப்படிக் காயப்படுத்தலாமா ..

அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டேன் என்று உன் கணவனைக் கரும்பென்னும்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்தான், இப்படி நீ அண்ணலை அலட்சியம் செய்வதைத் தாங்குவாரா? அடியார்கள் மனம் சற்று வாடினாலும் நீதான் பொறுத்துக் கொள்ள முடியுமா? ஆகையினால் மகளே, அரங்கனை மன்னித்து ஏற்று சேர்ந்திரு. உன் சேர்த்தி வைபவமான இன்றைய உத்திரத்திருநாளை வையகம் கொண்டாடட்டும்!” என்பதாக அருளினார்...


ஆகையினால் மகளே அரங்கனை மன்னித்து ஏற்று சேர்ந்திரு... உன் சேர்த்தி வைபவமான இன்றைய உத்திரத்திருநாளை வையகம் கொண்டாடட்டும்!” என்பதாக அருளினார்.

 

அன்னையின் மனம் சமாதானமாகிறது அண்ணலை அன்னை நோக்க அவரும் அன்புடன் நோக்க அங்கு ஒரு காதல் காவியம் அரங்கேறுகிறது.

 

 இருவரும் பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.


படி தாண்டாப் பத்தினியான அரங்க நாயகி கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, "ஏன் இவ்வளவு நாழி?" என்று தான் கேட்பாள்.


அதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே அந்த நாழி கேட்டான் வாசலிலேயே

 நடக்கிறது!


இவை அனைத்தும் ஶ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் கண் கொள்ளா காட்சி அல்லவா. அனைவரும் காணும் அழகு தரிசனம்....


ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!


அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை.

 

கோவில்மட்டுமா. ஊரே கொண்டாடும் திருவிழா இது.


வீட்டுக்குவீடு செம்மண் கோலமிட்டு, சக்கரைப்பொங்கல் செய்து கொண்டாடும் அற்புத நாள் இந்த பங்குனி உத்தர திருநாள்.


இரவு முழுவதும் சேர்த்தி மண்டபத்தில் சேர்ந்து அருளிப்பிற்கு பிறகு, விடிந்ததும் அன்னையை அவள் சந்நிதிக்கு அனுப்பிவிட்டு மறுநாள் அரங்கன் கோரதம் ஏறி வீதி உலா வருவார்.


வாழ்வில் ஒரு முறையேனும் காண வேண்டிய நிகழ்வு இது.


ஶ்ரீரங்கத்தில் விடிய விடிய நடக்கும் ரங்கநாயகி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவையை கண் குளிர காண அழைக்கிறோம்...


அதன் பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவர். 

சேர்த்தி சேவை

தத்துவார்த்தமாக, ஜீவாத்மாவுக்கும் பரமாத் வாவுக்கும் நடைபெற்ற பாசப்போராட்டமே இந்த `சேர்த்தி சேவை உற்சவம்.’ சேர்த்தி சேவை என்பது மிகவும் முக்கியமானது. வருட த்தில் ஒரு நாள் நடைபெறும் சேவை இது. தாயாருடன் சேர்ந்திருக்கும் ஸ்ரீரங்கநாதர் மிகவும் மனம் மகிழ்ந்து காணப்படுவார். அப்போது அவரிடம் வேண்டிக்கொண்டால், அனைத்தும் நிறைவேறும். அதனால் பக்தர்கள் தவறவிடக் கூடாத சேவை இது...’’ என்றார்..

ஶ்ரீரங்கா. ஶ்ரீரங்கா...


-Pa . Saravanan.

Srirangam