tamilnadu epaper

ஹைக்கூ

ஹைக்கூ

*நெற்றி வியர்வை நிலத்தில் விழ
உலகத்தோர் உண்டிக்காக உழவன் 
தன் உலகத்தின் உண்டிக்காக தாய்!

*ஆர்ப்பரிக்கும் அலைகளே 
கரையில் குழந்தைகளுடன் விளையாடுகின்றன! 

*பொருளாதாரத்திற்காக வெளிநாட்டில் தாய்
அழுத குழந்தை சமாதானமாகிறது
கனவிலே தாயின் அரவணைப்பு!

*தோற்றமும் மறைவும் இருளிலே 
ஓடிக் கொண்டேயிருக்கிறோம்
வெளிச்சம் தேடி!

பு. பாரதி கண்ணம்மாள் 
தஞ்சாவூர்