🏵️🏵️
என் பெரியப்பா விடம் ஒரு பெட்டியிருந்தது.
கருப்பு தங்கத்தினால் ஆனது;
நம்பிவிட்டோம்!
வினா ஒன்றும் வைக்கவில்லை.
பெட்டியோரம் முழுவதும் நகாசு வேலை.
அவ்வளவும் சொக்கத் தங்கம் என்பார்.
அவர் வார்த்தை; அனைத்தும் உண்மைதான்; என்றே நினைத்தேன்!
நாங்கள் எவரும் அதைத் திறக்கலாகாது!
தொட்டுப் பார்க்க ஆசை!
என் கனவிலும் நினைவிலும்
அடிக்கடி உலா வரும்;
அந்தப் பெட்டி!
பட்டுத் துணியால் மூடியிருப்பார்.
பட்டுத்துணியா?
' பெரியம்மா! உள்ளே என்ன இருக்கு?'
அவரின் நமட்டு சிரிப்புதான் பதில்.
வருடங்கள் போக;
கருப்புப் பெட்டியும
நினைவிலிருந்து போனது.
நேற்று கனவில் வந்தது;
அந்த கருப்பு தந்தப் பெட்டி!
புலர் காலைப் பொழுது; செல்பேசி ஒலி!
அண்ணன் கேட்டான்
' உனக்கு பெரியப்பாவின் பெட்டி வேண்டுமா?'
'கரும் தந்தம் பெட்டியா? உனக்கு வேண்டாமா?
எங்கள் எவருக்கும் அது வேண்டாம்; உனக்கும் வேண்டாமா? விலைக்குப் போடலாமா? உடனே சொல்'
'எடுத்து வை; எனக்கு வேண்டும்;
நான் எடுத்துக் கொள்கிறேன்.'
அதனுள் எப்படி இருக்கும்?
நான் என்ன வைக்கப் போகிறேன்; அதனுள்?
ஏனோ மனதில் பெரியம்மாவின் நமட்டுச் சிரிப்பு வந்து போனது.
அதை ஒரு முறையாவது தொட்டுப் பார்க்கணும்!
திறந்து பார்க்கணும்!

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?