வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் ரூ.27,000 கோடி மிச்சமாகும்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்

வெனிசுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் ரூ.27,000 கோடி மிச்சமாகும்: எஸ்பிஐ ஆய்வறிக்கையில் தகவல்


 

மும்பை: ரஷ்​யா​வுக்கு பதிலாக வெனிசுலா​விலிருந்து கச்சா எண்​ணெய் வாங்க இந்​தியா ஒப்​புக்​கொண்​டுள்​ள​தாக கூறப்​படும் நிலை​யில், அதனால் ரூ.27,000 கோடி வரை அதாவது 300 கோடி டாலர் வரை சேமிக்க முடி​யும் என எஸ்​பிஐ ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


இதுகுறித்து அந்த அறிக்​கை​யில் மேலும் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​ய-அமெரிக்க வர்த்தக ஒப்​பந்​தத்​தின் மூலம் இந்​தி​யா​வுக்கு பல ஆதா​யங்​கள் கிடைக்​கும் நிலை​யில் அதில் முக்​கிய​மாக வெனிசுலா கச்சா எண்​ணெய் மூல​மாக கிடைக்​கும் ஆதா​யம் முதலிடத்​தில் உள்​ளது. இதன் மூலம், இந்​தியா ஆண்​டுக்கு 300 கோடி டாலரை மிச்​சப்​படுத்த முடி​யும்.


ரஷ்​யா​விலிருந்து கச்சா எண்​ணெய் பெறு​வதைக் குறைத்​து, வெனிசுலா​விலிருந்து ‘மெரி 16' வகை கனரக கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வதன் மூலம் இந்​தியா இந்​தச் சேமிப்பை செய்​வது சாத்​தி​ய​மாகும்.


20 டாலர் தள்ளுபடி: வெனிசுலா எண்​ணெய்க்கு ஒரு பேரலுக்கு 10 முதல் 12 டாலர் வரை தள்​ளு​படி கிடைக்க வாய்ப்​புள்​ளது. இது உள்​நாட்​டுப் பணவீக்​கத்​தைப் பாதிக்​காமல், ரஷ்ய எண்​ணெய் தள்​ளு​படி நிறுத்​தப்​படு​வ​தால் ஏற்​படும் இழப்​பை​யும் ஈடு​செய்ய உதவும்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%