குமாரபாளையம் குடியிருப்புகளுக்கு சீல் வைக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வந்ததால் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் பாலக்கரை என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி அப்பராய சத்திரத்திற்கு சொந்தமானதாக கூறப்பட்டு வருகிறது. அப்புராயர் என்ற மன்னர் இப்பகுதியை ஆளும் பொழுது குடியிருப்புகள் உரு வாக்கி பொது மக்களுக்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறப் படும் இந்த பகுதி தற்பொழுது இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமானது எனக் கூறி, இந்து சமய அறநிலைத்துறை அதி காரிகள் கடந்த ஒரு வருட காலமாக இப்பகுதி மக்களை, குடியி ருப்புகளை காலி செய்து வெளியேருமாறு வற்புறுத்தி வரு கின்றனர். இந்நிலையில், புதனன்று இந்து சமய அறநிலை துறை ஈரோடு இணை ஆணையர் தலைமையில் வந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அப்புராய சத்திர பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்கு சீல் வைத்தனர். இதனால் ஆவேச மடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்ட துடன், பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள குமாரபாளையத் தில் இருந்து பவானி செல்லும் காவிரி ஆற்றின் பாலத்தின் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பயன் ஏற்படாததால், வட்டாட்சியர் பிரகாஷ் உடனடியாக அந்த பகுதி மக்களை வரவழைத்து சாலை மறி யலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என அழைத் ததின் பேரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் வட்டாட்சியர் அலுவலக நுழைவுப் பகுதியை அடைத்தவாறு அப்பகுதி மக்கள் தர்ணா போராட் டம் நடத்தினர். வட்டாட்சியர் பிரகாஷ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமிநாதன், கோவில் நில அலுவலர் செந் தில்குமார், செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் கலந்து பேசி, ஒரு வார கால அவகாசம் கொடுத்தனர். சீல் வைக்கபட்ட ஒரு வீட்டின் சீல் அகற்றப்பட்டது. அதன்பின் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். 8:00 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 05:00 மணி வரை நீடித்தது. குமாரபா ளையம் புத்தர் வீதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட மண்டபம் ஒன்றை அறநிலையத்துறை அதிகாரிகள் வசம், அதன் நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?