திட்டக்குடியில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

திட்டக்குடியில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா



கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், சிறப்பு அபிஷேகம், திருப்பாவை ஓதுதல், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரம், பூ அலங்காரத்தில், வடைமாலை சாத்துதல் நடந்தது. தொடர்ந்து 1008 சகஸ்ர நாமாவளி அர்ச்சனை செய்து, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோயில் கைங்கர்யம் ஸ்ரீ பாலாஜி வரதாச்சாரியர், விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா இராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%