புதுதில்லி, மார்ச் 22-
அரபிக்கடல் பகுதியில் சனிக்கிழமை யன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற் பட்டது. காலை 10.55 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.09 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலும், 65.36 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளி யாகவில்லை.