செய்யாறு ஏப்.10,
செய்யாறு அடுத்த உக்கல்அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று யாகசாலை வழிபாடு சிறப்பு பூஜையினை ஆலய குரு சங்கர் குருஜி நடத்தினார்.
பின்னர் கலச புறப்பாடு நிகழ்வுக்கு பின்னர் மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.