tamilnadu epaper

தவறான செய்தியால் தர்ப்பூசணி பழ விற்பனை பாதிப்பு

தவறான செய்தியால்  தர்ப்பூசணி பழ விற்பனை பாதிப்பு

இந்த ஆண்டு தர்ப்பூசணிப் பழ விற்பனை எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்தது. மேலும், தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக மக்கள் மத்தியில் பரவிய செய்தி தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், தர்ப்பூசணி விவசாயிகள் எதிர்பாராத பாதிப்புக்கு ஆளாகினர். சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ.15-க்கு விற்ற தர்ப்பூசணி பழங்கள், கிலோ ரூ.10-க்கு விற்றும் வாங்க ஆளில்லாமல் உள்ளது. இதுகுறித்து, பாபநாசம் அருகே தர்ப்பூசணி விற்பனையில் ஈடுபட்டிருந்த விவசாயி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு தர்ப்பூசணி விளைச்சல் அதிகம். இந்த ஆண்டு தர்ப்பூசணியில் ஊசி மூலம் சுவை கூட்டுகின்றனர் என்ற தவறான செய்தி பரவியதால், விலை வீழ்ச்சியை சந்தித்தது. விற்பனையும் சரிந்தது. இந்த வருடம் எதிர்ப் பாராத இழப்பை சந்தித்த விவசாயிகள், அடுத்த வருடம் தர்ப்பூசணி சாகுபடியில் ஈடுபடுவார்களா என்பது சந்தேகம்தான் என்று தெரிவித்தார்.