இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத்துறை அமைப்பான ‘ஷின் பெட்டின்’ தலைவர் ரோனென் பாரினை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பே ரோனென் மீது தான் நம்பிக்கையை இழந்து விட்டதாக நேதன்யாகு கூறியது குறிப்பிடத்தக்கது. நேதன்யாகுவிற்கு எதிரான போராட்டம் அதிகரித்து வரும் நிலையில் அவரது இந்த முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது