*இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை.
உழவாரப்பணி செய்தே சிவனருள் பெற்றவர்* *திருநாவுக்கரசர்.
பழங்காலத்தில் கோயிலில் கிடைத்த நைவேத்யம், சிறுவருமானத்தை பெற்றுக் கொண்ட சிலர் தெய்வத் தொண்டாக கோயிலை துாய்மைப்படுத்தினர்.
இதற்காக சில கோயில்களில் மானிய நிலம் கூட இருந்தன*
*நம்மை வாழவைக்கும் தெய்வத்தின் இருப்பிடத்தை உழவாரப்பணி செய்து பாதுகாத்தால் நம் சந்ததிகள் நலமுடன் வாழ்வர்*
*கோயிலில் புதர் மண்டிப் போகாமல் சுத்தப்படுத்துவது உழவாரப்பணி.
இதைச் செய்ய தோசைக் கரண்டியின் வடிவில் பெரியதாக உள்ள கருவிக்கு ’உழவாரப் படை’ என்று பெயர்.
இதைக் கையில் ஏந்தியபடி இருப்பவர் திருநாவுக்கரசர்*
*எப்போதும் உழவாரப்பணி மூலம் கோயிலை தூய்மை செய்தபடி பாடுவது இவரின் பணி.
சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்*
*உழவார பணி என்றால் என்ன?*
*சிவ ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்*
*1. என்வீட்டு துன்பங்கள் நீங்காமல் இருப்பதற்கு* *பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை குப்பை கூடங்களில் போடுவது*
*2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் திருநீறு போடுவதை சுத்தம் செய்வது*
*3. இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மாலிய பூக்களை நந்தவனத்தில் போடும் பணி.
*4. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..
*5. சுவாயின் ஆடைகளை துவைப்பது.*
*6. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.
*7. நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.
*8. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தபடுத்துவது
*9. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.
*10. சிவாச்சாரிகளின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.
*11. 63 வர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.
*12. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.
*13. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.
*14. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.
*15. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.
*16. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..
*போன்ற பணிகளே உழவாரப் பணி ஆகும்.*
*இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.
*உழவாரம் செய்வீர் இறைவன் அருள் பெறுவீர்.*
*உழவாரபணி செய்யும் அன்பர்கள் பெரும்பாலும் மருத்துவமனைக்கு செல்வதில்லை* என்பது அடியார்களின் அனுபவம்.
பிரம்ம ஸ்ரீ பாலசந்தர்