tamilnadu epaper

கள்ளழகர் வாராரு

கள்ளழகர் வாராரு


வாரா ரய்யா வாராரு

தங்கக் குதிரே மேல வாராரு 

பள பளன்னு பட்டூடுத்தி 

கள்ளழகர் வாராரு 


காண்போர் கண்கள் சொக்கிட 

காடு கழனி களெல்லாம் 

செழிக்க வைக்க 

சீறும் சிங்கமாய் சிலிர்க்க வைத்திட 

வாராரய்யா வாராரு


துவளும் மனங்களின் துயர் துடைக்க வாராரு 

வஞ்சனை செய்பவர்களை வேரறுக்க வாராரு 

வாராரய்யா வாராரு


வான்மழை பொழிய வைத்து 

சுட்டெரிக்கும் வெயிலை போக்கி

தண்ணீர் பூ மழை பொழிய 

மகிழ்ச்சி துள்ளலில்

மக்கள் வெள்ளத்தில் 

மிதந்து மிதந்து வாராரு 


-நல.ஞானபண்டிதன்

திருப்புவனம் புதூர்