tamilnadu epaper

தஞ்சை பெரியகோவில் சித்திரை பெருவிழா

தஞ்சை பெரியகோவில் சித்திரை பெருவிழா


வருகிற *23.04.2025 (புதன்கிழமை)* காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது. 

*ஏப்ரல் 24 (வியாழக்கிழமை)* காலை 8

மணிக்கு பல்லக்கிலும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. சந்தனக்காப்பு அலங்காரம்

*25-ந் தேதி* காலையில் பல்லக்கிலும், மாலையில் மூஞ்சுறு வாகனத்திலும் விநாயகர் புறப்பாடு நடக்கிறது. *26-ந் தேதி* காலை 8 மணிக்கு விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. *27-ந் தேதி* காலையில் பல்லக்கிலும், மாலை 6.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்திலும் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.

*28-ந் தேதி* காலையில் சுப்பிரமணியருக்கு சந்தனகாப்பு அலங்காமும், மாலையில் சைவ சமயாச்சாரியர் நால்வர் புறப்பாடும் நடக்கிறது.

*29-ந்தேதி* காலையில் நால்வர் பல்லக்கில் புறப்பாடும்,மாலையில் சூரியபிரபையில் சந்திரசேகரர் புறப்பாடும், *30- ந் தேதி* காலையில் பல்லக்கி லும், மாலையில் சந்திர பிரபையிலும் சந்திரசேகரர் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் சாமி புறப் பாடு நடக்கிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் *(மே) 7-ந் தேதி* காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, மேலவீதியில் உள்ள தேர் நிலைக்கு வருகின்றனர். பின்னர் தியாக ராஜசாமி அம்பாளுடன் தேரில் எழுந்தருளுகிறார். விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பலாம்மாள், சண்டி கேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சப்பரத்தில் எழுந்தருளுவார்கள். பின்னர் 4 வீதிகளிலும் தேர் வடம்பிடித்து இழுக்கப்படும்.

வருகிற *(10.05.2025) சனிக்கிழமை* காலை 10: 30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12 மணிக்கு வாழை மட்டையடி வைபவம், மாலை 6.30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், உபயதார்களும் செய்துள்ளார்.