tamilnadu epaper

திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு பவுர்ணமி கருடசேவை ரத்து

திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு  பவுர்ணமி கருடசேவை ரத்து


திருமலை, ஏப்.17

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்க உள்ள பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.  

மே 12-, ஜூலை 10, ஆகஸ்டு 9, அக்டோபர் 7-, நவம்பர் 5, டிசம்பர் 4 -ம் தேதிகளில் நடக்கும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. காரணம் என்ன?

ஜூன் மாதம் 11ல் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் (3-வது நாள்) நடப்பதாலும், செப்டம்பர் 7-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதாலும், டிசம்பர் மாதம் 4-ம் தேதி கார்த்திகை தீபம் நடப்பதாலும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்அளித்துள்ளது.