ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ளது. கோடைகால ஒலிம்பிக் தொடர் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. ஜூலை 26ம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை ரசிகர்களுக்கு விருந்தையும், வீரர்களுக்கு விருதையும் அள்ளித் தர காத்திருக்கின்றன.
தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஈபிள் டவருக்கு அருகே உள்ள சாம்ப்-டி-மார்ஸ் கார்டன் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.133 நாடுகளில் வசித்து வரும் 10500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகள் , 32 பிரிவு விளையாட்டுகள் என 15 நாட்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் களைகட்ட உள்ளன. வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்நாட்டின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒலிம்பிக் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் ஃப்ரிஜியன் தொப்பி மஸ்கட் ஒலிம்பிக் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிரென்ச் புரட்சியின் நூற்றாண்டு நினைவு சின்னமான ஈபிள் தவறுக்கு அருகே பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கவும், ஃப்ரிஜியன் தொப்பி மஸ்கட்டாக அறிமுகப்படுத்தபடவும் காரணம் உள்ளது.