சேலம், ஏப்.10-
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி செல்வதும் அதனை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ரயில்வே போதை பொருள் தடுப்பு போலீசார் ரயில் களில் தீவிரமாக கண்கா ணித்து வருகிறார்கள். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ரயிலில் வியாழனன்று (ஏப்.10) போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது கேட்பாரற்று கிடந்த ஒரு கைப்பையை எடுத்து சோதனை செய்த போது அதில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. மேலும் அதற்கு யாரும் உரிமை கோராத நிலையில் அதனை கொண்டு வந்தவர் யார்? என்று தெரியவில்லை.இதையடுத்து கேமரா வில் பதிவான காட்சிகளை வைத்து ரெயில்வே போலீ சார் கஞ்சா கடத்தி கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.